7 August 2013

நட்பில்லாமல்



உண்மைகளை நீ மறைத்தால் அங்கே உன் நட்பும் மறைக்கப்படும்...

நட்பின் இல்லம் நம் கல்லூரி அதில் வகுப்பறையே நாம்
வாழும்அறை.....

தலைகணத்தால் தவறிபோன நட்பிடம்
தலை வணங்கியிருந்தால்,
நல்ல நண்பன் தவறியிருக்கமாட்டான் உன்னைவிட்டு....

எத்தனை தடவை சண்டைகள்வந்தாலும் பிரிவை விரும்பாத நட்பு மட்டுமே நல்ல நட்பு........

உனது அன்புக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்காவிட்டால் அது நட்பானாலும்சரி,காதலானாலும்சரி இறுதியில் தோல்வியில்தான் முடியும்....


அன்னையில்லாமல் யாரும் பிறந்திருக்க முடியாது அதைபோல
நட்பில்லாமல்
யாரும் வாழ்ந்திருக்கமுடியாது.....

கவிதைகளின் நூலகம்



தேர்வுதாளில் எழுதமறுத்த என்பேனா,
தேர்வறை இருக்கையில் எழுதச்சொல்கிறது அவளுக்கென ஒரு கவிதையை.....

கல்லூரி நூலகத்தில் அவளது கைபட்ட புத்தகத்தை கவிதையாக மாற்ற ஆரம்பித்தேன் முதலாமாண்டு முதல்,
இறுதி ஆண்டில் கல்லூரிநூலகம் என் கவிதைகளின் நூலகமானது......

என்னை திருடியது என்னவோ அவள்தான் ஆனால் காதல்சிறையில் இருப்பது என்னவோ நான்தான்.....

அன்புபேசும் உன் இதயத்திற்கு இணையாக அன்பாய் பேசதெரியவில்லை என்வசம்உள்ள எந்தமொழிக்கும்.....

பார்த்ததும் வருவது காதலல்ல வயதின்ஈர்ப்பு...
இதயத்தை ஈர்த்தபின் வருவது மட்டுமே காதல்...

பிரிந்திருந்தால் உன்னை நேசிக்கமறந்துவிடுவேன் என நீ நினைத்தாய்...
பிரிவின்மூலம் உன்னை அதிகம் நேசிக்க கற்றுகொண்டேன் நான்....