7 August 2013

கவிதைகளின் நூலகம்



தேர்வுதாளில் எழுதமறுத்த என்பேனா,
தேர்வறை இருக்கையில் எழுதச்சொல்கிறது அவளுக்கென ஒரு கவிதையை.....

கல்லூரி நூலகத்தில் அவளது கைபட்ட புத்தகத்தை கவிதையாக மாற்ற ஆரம்பித்தேன் முதலாமாண்டு முதல்,
இறுதி ஆண்டில் கல்லூரிநூலகம் என் கவிதைகளின் நூலகமானது......

என்னை திருடியது என்னவோ அவள்தான் ஆனால் காதல்சிறையில் இருப்பது என்னவோ நான்தான்.....

அன்புபேசும் உன் இதயத்திற்கு இணையாக அன்பாய் பேசதெரியவில்லை என்வசம்உள்ள எந்தமொழிக்கும்.....

பார்த்ததும் வருவது காதலல்ல வயதின்ஈர்ப்பு...
இதயத்தை ஈர்த்தபின் வருவது மட்டுமே காதல்...

பிரிந்திருந்தால் உன்னை நேசிக்கமறந்துவிடுவேன் என நீ நினைத்தாய்...
பிரிவின்மூலம் உன்னை அதிகம் நேசிக்க கற்றுகொண்டேன் நான்....

No comments:

Post a Comment