26 May 2014

என்னவன் என்னில் மின்னுவது

அன்பானவர்களை அடையாளம்காட்டிடும், "துன்பமும்"
அழகானதே என்பார்வையில்....

*****

நான்கிமைகளின் நடனாலயம் -
"இருவிழிகள்"
அன்பானவர்களின்
சரணாலயம் -
"இதயம்" 


*****

நினைவின்மழையில்
நனைந்திடும் நொடியில்,
"என்னவன் என்னில் மின்னுவது"
இதயம் இதுவரை ரசிக்கமறந்த அழகில் ஒன்றானது...


******

உடலோடு பொருந்திய உயிரைவிட,
உள்ளத்தோடு பொருந்திய
உன் நினைவுகள் ரசிக்கத்தக்கவை...


*****

உடல்முழுதும் பாயும் உதிரத்தால்
உயிர்வாழ்ந்த "உள்ளம்" ஏனின்று
உன்னால் உயிர்வாழநினைக்கிறதோ?
காதலின் செயல்பாட்டில் சிக்கினால் கடவுளுக்கும் என் நிலைமை தான் 


*****

உன்னால் உணரப்பட்ட உண்மை:-
அதீத அன்பை
நேசித்தவர்மீது
வைத்தால்,
நேசித்தநெஞ்சம்
பலமுறைகள்
மரணவலி காண வேண்டியிருக்கும்...


*******

உயிரில் உதித்தவர்களே உதைக்கும்போதுதான் பிறந்துவிடுகிறது
 காயங்களின் குழந்தையாக "கண்ணீர்"...

********
 
அவளது
கற்பனையில் கட்டினால்,
கவிதையின்
ஆயுளும் அதிகமாகிறது....

******


 

No comments:

Post a Comment