31 December 2013

கருவிழி உடைந்து கண்ணீர் ஓடும்

கருவறையில் உதைத்தேன் சினம்கொள்ளமால் சிரித்தாள்...

கருவறையைவிட்டு இறங்கும்வரை 
இரத்தத்தை இரையாக்கினாள்...

உறுப்புகள் உருவாகும்வரை இடம்கொடுத்தாள் கருவறையில்....

நடமாடும்வரை இடம்கொடுத்தாள் இடையில்....

மரணம்வரை
இடம்கொடுத்தாள்
மனதில்....

உன் உறக்கத்தை உறிஞ்சி உயிர்வாழ்ந்த என்னை
இதுவரை
உன்னை மிஞ்சி யாரும் நேசிக்கவில்லை....


**********

விலகிநின்று
விரும்பு...
விரும்பியபின்
விலகாதே...


*********

விளக்கின் மதிப்பு
வெளிச்சம் விலகையில் தெரியும்....

உள்ளத்தின் மதிப்பு
உயிர் விலகையில் 
தெரியும்...

அன்பின் மதிப்பு
அருகாமை விலகையில் தெரியும்....


********

உன் கருவிழி
ஓரப்பார்வை தூவிபோகையில், கவிதைவரும் காகிதத்தோடு....
உன் கருவிழி
பாராமல்போகையில், கண்ணீர் வரும் கண்ணங்களோடு....



*********

அடித்துவிரட்டினாலும் அருகாமையை திருடும் சிலரது நினைவுகள்....
துரத்திபோனாலும்
தூரம் போகும் 
சிலரது நினைவுகள்....
கண்ணீராய் வரும்
சிலரது நினைவுகள்....
கனவாய் வரும்
சிலரது நினைவுகள்....
உயிர்வாழ
உணவாய் வரும்
சிலரது நினைவுகள்....


********

காயங்கள் மோத,
கருவிழி உடைந்து கண்ணீர் ஓடும்....
மரணம் மோத,
மனம் உடைந்து
காதல் ஓடுமா?....


**********

என்றோவரும்
இறப்பை நினைத்தே இதயம் வாழ்ந்தால்,
இழக்கும் இன்பத்தை...

உனக்காக உண்டான நொடிகள், 
நோய்கண்டு
வாழமுடியாமல் வாடும்...

இன்பமாலையை இதயம் சூடநினைத்தால் மட்டுமே
மணக்கும் மனது....
பிறக்கும் புன்னகை...
இறக்கும் காயங்கள்...
கசக்கும் கண்ணீர்...
இனிக்கும் இன்பம்.


********

ஆயுளையும் கரைத்துபார்த்தேன்

ஆயுளையும் கரைத்துபார்த்தேன் ஆனால் உன்
அன்பு கரையவில்லை.. 
இதயத்தையும் இழந்துபார்த்தேன் 
ஆனால் உன் நினைவுகள் இறக்கவில்லை....

********

ஆண்டவன் செய்த
மரணஅறையில் 
வாழ்ந்ததைவிட
அன்பு செய்த உன்
மனஅறையில் 
வாழ்ந்ததே அதிகமடி....

*********

இரவு சொல்லிய கவிதை ............நிலவு
காலை சொல்லிய கவிதை........கதிரவன்
இமை சொல்லிய கவிதை...........கனவு
இதயம் சொல்லிய கவிதை...........காதல்
இதழ் சொல்லிய கவிதை.......புன்னகை
பிரிவு சொல்லிய கவிதை..........காயம்
காயம் சொல்லிய கவிதை.........கண்ணீர்
தனிமை சொல்லியகவிதை.........தவிப்பு
அம்மா சொல்லிய கவிதை.........அன்பு
நட்பு சொல்லிய கவிதை........நம்பிக்கை
விதை சொல்லிய கவிதை...........மரம்
பாதை சொல்லிய கவிதை...........பயணம்
தோல்விசொல்லிய கவிதை.........வெற்றி
முயற்சிசொல்லியகவிதை.......தன்னம்பிக்கை

முற்றுப்புள்ளி சொல்லிய கவிதை ..........முடிவு

*********

இமைகள் சொல்லி காதலிருத்திருந்தால், காலை கனவாக கலைந்திருப்பாய்...
இதயம் சொல்லி காதலித்ததால்,
மரணமில்லா நினைவாக நிற்கிறாய் ஜீவனுள்ளே...


*********

என்றோ
மரணத்தில் நழுவி விழவேண்டிய இதயம் ஏனோ,
இன்றே
உன் காதலில் விழுந்து மரணக்காயம் வாங்கவருகிறது பெண்ணே! உன்னிடம்...


*********

கல்வெட்டில் உறங்கும் கதைகளல்ல உன் கண்அசைவுகள்....

கல்லறையில் உறங்கும் நுரையீரலல்ல என்னுள் நுளையும் உன்
நினைவுகள்...


*********

உடலை உயிர்பிரியும்போது கலங்காத கண்கள்,
உன் உறவை உயிர்பிரியும்போது கதறிஅழும் உன்பிரிவினால்...


*********

உன் நிஜத்தின் தோளில்,
நிழலுக்கு அடைக்கலம் தருகிறாய்...

உன் கண்ணின் தோளில்,
கனவுக்கு அடைக்கலம் தருகிறாய்...

உன் அன்பின் தோளில், அடைக்கலம் தரமறுத்து தள்ளிவிடுகிறாயடி தவிப்புக்குள் என்னை...


*********

இமையின் கைகோர்த்து, கனவுகளில் உன்னை கடன்வாங்குகிறேன்....

இதயத்தின் கைவிரித்து,
காதலியாக உன்னை கடன்வாங்கினேன்....

நினைவின் கைபிடித்து, நீண்டஆயுளை உன்னிடம் கடன்வாங்குவேன்....


**********

எழுத்துகள்
பிழையானால்,
பொருள்
மறைந்துநிற்கும்....
அதைபோலவே,
எண்ணங்கள் பிழையானால், வானவில்வாழ்வே
மறைந்துநிற்குமடி....


*************

வரலாறில் வருவேனோ

உன்னை எழுத தமிழிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால் 
வரலாறில் வருவேனோ...

*********

ஓரெழுத்து கவிதையாக 
"நீ" இருந்தால், 
ஈரெழுத்து கவிதையாக 
"நான்" இருப்பேன்.....

*******

கடலில் விழுந்த 
மழையை 
மீட்பது போல், 
காதலில் தவறிவிழுந்த 
மனதையும் 
மீட்பது இயலாத 
நிகழ்வோ...

********

திறமை என்பது மறைந்துவாழும் மனது போல்
எல்லோரிடமும் உண்டு
உணர்ந்தவரிடத்தில் உயிர்வாழும்(துடிக்கும்) உணராதவரிடத்தில் உயிர்விடும்(துடிப்பதுபோல் நடிக்கும்)....

*********

பிரிவின் 
பொருளும்,வலியும் புரிந்ததால் தான், 
உன்னை புரிந்துகொள்ள வழி கிடைத்தது 
நீ இல்லாமல் நீந்தும் 
உன் நினைவின் பயணத்தில்....

*********

இதயம் தூக்கம்கொள்ளாமல் துடிப்பது உயிர்வாழ என நினைத்திருந்தேன் 
இத்தனை நாட்களாய்
இன்றுதான் தெளிந்தது என்னுள் வாழும் உன்னுடன் வாழ்வதற்காகென.....

*********

எழுத்துகள் எழுந்து நடக்காமல் ஊனமாகின்றன 
என்னிடம் நீ 
மெளனமாவதால்....
வார்த்தைகள் வயதாகமால் வாழ்கின்றன 
என்னிடம் நீ கவிதையாவதால்....

********

உன் நினைவுகளை இழக்காதவரை, 
என் இதயம் இறக்காது....

********

ஆசைகளுக்கு கரங்கள் செய்தால், 
விண்ணில் நிற்கும் நிலவும் விரைவில்
விரலில் நிற்கும்....
ஆசைகளுக்கு உயிர் செய்தால்,
உடல்இல்லாததற்கும் உயிர்முளைக்கும்....

********

உன்னை நானும் 
என்னை நீயும்
புரிந்துகொண்டால்,
பிரிவின் நிழல்கூட 
நம் பின்னால் வராது....

*********

இரவின் இருளில் 
புகழ் தேடுபவளே...
பார்வை பாய்ந்தால் 
முகம் மறைப்பவளே... 
உடல் இல்லாமலே
உள்ளம் திருடுபவளே...
நடைபயிலும் நாட்களில்
விண்ணில் நழுவி மண்ணில் விழாதவளே...
கவிஞனின் கண்ணில் விழுந்தெழுந்தாய் கைவிரல்கவிதையாக... வயதுகள் சொல்லாமல் வாழ்கிறாய் வானிலே...
என்னை திருடிய
இயற்கையின் இருப்பிடத்தில்
உனக்கே முதலிடம் ....


***********

இதயவீடு திரும்பிசெல்கையில்

ஆயிரம் உறவுகள் ஊமையாக 
(உண்மையின்றி) வாழ்கின்றன 
என்னருகில்... 
நீ மட்டும் தான் உண்மைபேசும் 
உறவாக வாழ்கிறாய்
என்னுள்ளே...

********

கல்லில் கலப்படமானபின் சிற்பத்தை 
பிரித்தெடுக்க முடியாததை போல், 
உயிரில் கலப்படமானபின் உன்னையும் 
பிரித்தெடுக்க முடியாது....

*********

தூக்கம்:-

விழிமூடிகாத்திருந்தாலும் நீ விழிவசம் வந்தடைவதில்லை... 
நீ வரும்வேளையில் இருதயம் என்னிடம் இருப்பதாய் 
தெரிவதில்லை... 
நடப்பது,நடந்தது எல்லாம் மறந்து நடமாடுகிறேன்
உன்னாலே...
உடல்அசைவுகளை
நிறுத்தி உள்ளஅசைவில்
உயிர்வாழ வருகிறாய்...
உன்னுள்ளே பயணிக்க கனவுசாலை வைத்திருக்கிறாய்
என்னுள்ளே...
இதயம் ஈர்த்த அனைத்தும் இச்சாலையில் கிடைக்கும் கனவாக ஒருசில நொடிகளில் மட்டும்...
விழிகளுக்கு நிறமூட்டிய உன்னை விடியல் அழித்துவிடும்...


********

கண்களின் கற்பனையில் வாழ்வதே கனவுகள்... 

கற்பனையின் கண்களில் வாழ்வதே கவிதைகள்...

*********

மழை நின்றுபோனாலும் மழைதரும் இதம் 
உன் மனம்தரும் பெண்மழையே! உனதருகில் நின்றால்...

அனைவரின் அன்பு அணைந்துபோனாலும் உனது அருகாமை பெய்த அரைநொடி அன்புமழையின் நினைவுசாரலால் நனைகிறது என்ஆயுளடி...

**********

மழலையே! 
உன் 
மலர்பாதசுவடுகள் 
என்னில் என்று 
தோண்டினாலும் கிடைக்கும் 
ஏன் தெரியுமா?
என் மனதில்
புதைந்ததால்...


***********

மனதில் பெண்ணை வைத்து
விரலில்
பென்னை வைத்து
காகிதத்தையும் கற்பனையும் தேடினேன் கவிஞனாக...

காயங்களை
என்னுள் சேமித்து
கண்களிலே
கண்ணீரை சேமித்து சேமித்ததை செலவலிக்க
உன்னை தேடினேன்
தோழனாக...

நெருங்கும்போது
புரியாத நேசம்
பிரிந்தபிறகு
புரிகிறது என்னில்
புரியும்வேளையில் விழிநீர்மட்டம்
உயருகிறது கண்ணில்..

காதல் அதிகம் தரவேண்டிய ஊமைஉறவுகள்
கண்ணீர் அதிகம் தருகின்றன...

உண்மை அன்பை உலகமெங்கிலும் தேடி இதயவீடு திரும்பிசெல்கையில் என்னை தேடி மரணம் மனவாசலில் நிற்கிறது...


*********

அம்மாவின் மடி போல் ஓர் அலகிய உலகம் இதுவரை பிறக்கவில்லை....
நம்பிக்கையான உன் நட்பை போல் ஓர் உண்மையான உறவில்லை இதுவரை என்னிடம் ....
என் கல்லறையையும் காதலிக்கும் உன்னை போல் எவளையும் என்னவளாய் இதுவரை ஏற்கவில்லை....

இதயத்தால் படித்து

காலைவானில் காணமால்போகாமலிருக்க ஆகாயநிலவிற்கு
ஆக்ஸிஜன் அனுப்பி உயிர்அளித்தேன்...

உயிர்பூத்த நிலவாலும் உள்ளத்தில்பூத்த உன்னாலும்
அகிலமும் அகமும் அழகானதடி...

இரத்தநாளங்களில்
கவிதைகளாய் வழிந்து நரம்பில் நடனமாடி இறுதியில் இதயம் சேர்ந்தாயடி...

தூங்கா துடிப்பாகி உன்ஆழ்மனதுள் ஆயுள்கரைப்பேனடி...

விழிகளை விடியல்உரசும்வரை உணரவில்லை
கண்ணோடு
வாழ்ந்தது கனவென...

கனவுகலைந்த பிறகு புரிந்தது வாழ்ந்தது பெண்ணே!
உன் நினைவென...


********

உன் தேவைக்காக சுழலும் மின்விசிறியல்ல
என் இதயம்,
நீ நினைக்கும் நேரங்களில்
அனுபவித்து
அணைத்துசெல்ல...


*********

சுவாசித்தவரின் சுவாசபாதையில் சுற்றிதெரியும்
மலரின் வாசம்
போல
நேசித்தவரின்
நெஞ்சில்
நெருக்கமாகிறது
மனதின் வாசம்...


*********

உன் வருகையால் என்னுள் தென்பட்டஅறிகுறிகளை தேடி ஆராய்வதற்குள் தொலைத்துவிட்டேன் இதயதுடிப்புகளை
"உன்னிடம்"
உயிரிடம் காரணம் கேட்டால் காதலென கதை சொல்கிறது
"என்னிடம்"....


***********

விழிகள் போல எனக்கு
இதயமும் இரண்டடி இருப்பிடத்தின் இடைவெளிமட்டும் அதிகமடி
ஒன்று என்னிடம் மற்றொன்று உன்னிடம்....


***********

இதழ்களால் படித்து இதயத்தில் பதியும் காகிதகவிதையல்ல நான்,
இதயத்தால் படித்து
இருவிழியில் பதியும் பெண்கவிதை...


**********

ஊஞ்சலாடும் பார்வைகள் ஏனோ உனைகண்டதும் ஊனமானதோ...

கதை பேசும் விழிகள் ஏனோ உனைகண்டதும் கவிதைபேசுதோ...

ஊமை விழிகள் 
ஏனோ உனைகண்டதும்
உரையாடுகிறதோ...

இரவின் இருளில் உறங்கிய இருவிழிகள் ஏனோ
உனைகண்டதும் உறக்கத்தை தொலைத்ததோ...

உருவம் வாங்கி உயிர்வாழ்ந்த விழி ஏனோ
உனைவாங்கியதும்
உறைந்துபோனதோ...


*********

உனக்காக "நான்"
வாழலாம்...
எனக்காக "நீ"
வாழலாம்...
நமக்காக வாழ்வது
நம் "இதயம்" ஒன்றே...


***********

விழித்திரையில் பிறந்து

நிலவின்கவிதையில்
நீச்சலாடும் இரவில் பறவைகள்கூட பறப்பதில்லை 
"இதயம்" மட்டும் ஏன் பறக்கிறதோ 
என்னவளைத்தேடி...

*********

அன்னை இல்லாமல் போனால் அன்பை மறப்போம்
தேவைகள் இல்லாமல் போனால் தேடலை மறப்போம்
உண்மை இல்லாமல் போனால் உறவுகளை மறப்போம்
கண்கள் இல்லாமல் போனால் கனவுகளை மறப்போம்
வண்ணம் இல்லாமல்
போனால் வானவில்லை
மறப்போம்
வாசங்கள் இல்லாமல் போனால் நேசங்களை மறப்போம்
காதல் இல்லாமல் போனால் காயங்களை மறப்போம்
காயங்கள் இல்லாமல் போனால் கடவுளை மறப்போம்
இதயம் இல்லாமல் போனால் இவைஅனைத்தையும் மறப்போம்



*******

பிரிய நினைக்கும் நீ என்னை புரிய
நினைக்கலாமோ?

எழுதிவிட்டுஅழிப்பதால் என் நெஞ்சம் எழுத்துபலகைஆகிடுமோ?

உன் இமையின் இடர்பாடுகளில் சிக்கியதால் என்இதயம் இறந்துவிடுமோ?

பெண்பார்வைஎரியாமல் போனால் ஆயுளும்
அணைந்துபோகுமோ?

பிரிவின் தூரத்தால் என்னைகடந்து பயணிப்பாயோ?

உன்னை இழந்தால் இலைபோலான இதயம் சருகாகுமோ?

உன்னைபருகியதன் பயனாய் நான்உருகிவிடுவேனோ?

உன்னிடத்தில்கொடுத்த
உள்ளத்தை திரும்பபெறமுடியுமோ?

உன்னில் மிதந்த என்னை என்னால் பிரித்தெடுக்கமுடியுமோ?

நீ இல்லாமல் என்னுலகம் இயக்கம்பெறுமோ?

மரணம் வருவதற்குள் மனம் உன்னை மறந்துவிடமுடியுமோ?

கல்லறை நுழைவதற்குள் காதல் தொலைந்துபோகுமோ?

எரிக்கும் உன் நினைவுகளை எரிக்கமுடியுமோ?

உள்ளம் ஊமையானபிறகும் இவைகளை விவரிக்க வருவாயா? விரைவில்...


***********

கைகள் இல்லாத உன்
கண்கள் தீண்டுதலை
போல
கால்கள் இல்லாத உன் கவிதையும் தீண்டுகிறது
என்னை....


*********

மழலையே!
விழித்திரையில் பிறந்து மனதிரையில் நடந்து
உயிர்திரையில் ஓடுகிறாய்


*********

கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும்

பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக, 
உடலை துண்டாக்கி 
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை... 
இப்படிக்கு, 
ரோஜா. 
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?

*********

பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..

*********

பாவையே! 
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும், 
தாக்குதல் நடத்திய பார்வையால் 
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும் 
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும், 
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...

***********

மலரின் வாசம் 
குடிக்கவந்த வண்டுகள் போலவே 
மனதின் நேசம் குடிக்கவந்தேன் 
உன்னிடம்...

********

உயிரைகலவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகலவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...

**********

கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...

********

மண்ணை அரித்துசெல்லும் 
மழையும், 
என்னை 
அரித்துசெல்லும் 
நீயும் ஒன்றே...

********

கண்ணில் வந்தாய் கனவென 
நினைத்தேன்...

கவிதையில் வந்தாய்
கற்பனையென நினைத்தேன்...

நெஞ்சில் வந்தாய் நினைவென
நினைத்தேன்...

நேரில் வந்தாய்
நிஜமென
திகைத்தேன்!!!


*********

பாவையின் பயணம்:-

தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க...

கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...

நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...


************