5 July 2013

என் முதல் காதலி அம்மா

மழலையே! உன்னை கொஞ்சிக்கொண்டே, மிஞ்சிக்கொண்டு போயிருமோ இறைவன் வகுத்த வாழ்நாளைவிட என் வாழ்நாட்கள்......

என் முதல் காதலி அம்மா. இந்த காதலை மட்டும் இறைவன் எப்படி இணைத்துவைத்தானோ?.....

பகலில் திறந்த இமைகதவுகளை இரவில் பூட்டமுடியவில்லை ,இமைகளுக்கு இடையில் நீ புகுந்துள்ளாயே காதலனே...

அன்பை அள்ளித்தரும் ,ஆயுள்முழுவதும் அருகில் இருக்கும் பெண்கடவுளை கடனாக வாங்கினேன் அவள் தான் என் அம்மா.......

கண்ணா என் விரல்களுக்குள் மோதல் எவை உன்னை கவிதையாக முதலில் எழுதுவது என்று .......இந்த மோதலில் என் காதல் புரிகிறதா?......


மழழையே என் மனதை உன்னிடம் அடகுவைத்துவிட்டேன் மீண்டுவரவிருப்பம் இல்லை மீளவும்முடியவில்லை....அடைபட்டுவிட்டேன் உன் அசைவுகளிடம்.....

தன்னம்பிக்கை இருந்தால், "செயல்படமுடியாது" என்னும் வார்த்தை செயலிழந்துபோகும் உன்னிடத்தில்.....

2 July 2013

புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக.....

138. என் இதயம் தீண்டுகிறாய் உன் கண்இமைபேசும் வார்த்தைகளால்....பெண்ணே.......

139. கடவுளே அவளது கண்அசைவுகளை கட்டிவைத்திருந்தால் ,காதலனாக காணாமல் போயிருக்கமாட்டேன் அவளிடம்.......

140. எனக்கு மரணம்தர விரும்பிதான், மறந்து சென்றாளோ என்னை....

141. புரிந்துகொண்டதால்தான், புதைந்துள்ளேன் உன்னுள்காதலனாக......

142. மழைத்துளி பெண்ணைத்தொட்டு கீழேவிழுந்ததால்தான் மண்ணிற்கும் வாசனை வருகிறது......
143. இடைவெளி அதிகமிருந்தும் காதலர்களாகவில்லையா வானும்,மண்ணும்
144. உன் மனச்சாலையில் பயணம் செய்கிறேன் இறுதிவரை
 
 

  

கண்ணீர் காயங்கள்

132. இயல்பாய் தோன்றிய உன் காதலுக்கு மறைவே கிடையாது என்னிடம் அதை என்றுமே மறந்துவிடாதே....

133. விழி கடந்துவரும் கண்ணீரால், காயங்கள் கடந்து செல்வதில்லை நம் வாழ்வில்.....

134. காதலனே உன் மௌனகாதலியாக வாழந்திருந்தால் காயங்கள் உனக்கு மட்டும்தான்.....உன் பேசும்காதலியானதால் கண்ணீர் காயங்கள் எனக்கும் தான்......

135. உனது ஊமைவிழிகளையும் பேசவைத்தது என் உண்மை காதல்தானடி.....

136. மாலையும் மறையஆரம்பித்தது என் பெண்ணிலவை காண......

137. அவளது இதழ்பேசும் வார்த்தைகளை விட, இமைபேசும் வார்த்தைகளால்தான் என் இதயம் மடங்கிபோனது என்னவளிடம்....    

மனதை பறித்து பரிசளித்தேன்

126. என் இதயம் சேகரித்த உன் இதழ்வார்த்தைகளை இறக்கிவைக்க முடியாமல் வேதனைகளோடு வெந்துசாகுகிறேனடி..

127. மலர்களை பறித்து பரிசளிக்கவில்லை என் மனதை பறித்து பரிசளித்தேன் அன்போடு அவளிடம்....

128. என் விழியிடமிருந்து ஒழுகும் துன்பக்கண்ணீரை உன் விரல்கள் விலக்கினால், அடுத்து என் வழிகளில் ததும்புவது ஆனந்தகண்ணீர் தான்....

129. பெண்ணே உன் இருவிழி கவிதைகளை விடாமல் வாசித்ததால்தான், காதலனாக மாறினேன் உன் விழியில்லாஇதயத்திடம் .....

130. தூக்கம் மறக்க கனவுகள் தருபவளே உன்னைபற்றிய கனவுகளை மறக்க தூக்கம்தாடி...

131. என் தேவைகளை பூர்த்திசெய்யும் நீ எனக்கு தேவை....   

கடல்தண்ணீரும் கண்ணீரோடு.....

119. பெண்ணே என் காதலை ஏற்காமல்கூட போய்விடு அதை ஏற்கமுடியும் என்னால்....காதலித்துவிட்டு காணாமல் போகாதே அதை ஏற்கமுடியாது என்னால்.....

120. மழையில் நனையவிடாமல் வெண்ணிலவை மறைத்து வைத்துள்ளது வானம் இதல்லவா அன்பு.....

121. பெண்ணே நீ வாங்க மறுத்த என் இதயம் உன் வாசனைகளோடு மண்ணோடு வாழ்ந்து மடியுமே தவிர வேர எந்த பெண்ணோடும் வாழாது..

123. ஆரம்பத்தில் கடல்தண்ணீரும் அமைதியாகத்தான் அமர்ந்தது மண்ணில் எந்த பெண்ணின் விரல் பட்டதோ தெரியவில்லை, அலையாக அசைய ஆரம்பித்தது அவளைத்தேடி....கடல்தண்ணீரும் கண்ணீரோடு.....

124. மரத்தின் வேர்களுக்கும் மறைவான காதல்தானா மண்ணோடு.....

125. பெண்ணே என் இதயத்தின் விழிகளுக்கு உறக்கமே இல்லை உன்னை கண்டநாள் முதல்....    

துன்பம் தூரத்தில்கூட நிற்காது...

113. இதயத்தில் காதலை நிரப்பவும் விழிகளில் கண்ணீரை நிரப்பவும் காதலியே உன்னால் மட்டுமே முடியும்...

114. அன்பை வைத்து என் இதயத்தில் அமர்ந்துவிட்டாய் அதனால் தான் பெண்ணே உன்னை அனுப்பவும் முடியல என் இதயத்தைவிட்டு....

115. இருக்கும் உறவுகள் உண்மையாக இருந்தால் துன்பம் தூரத்தில்கூட நிற்காது...

116. உனது அன்பை முகத்தோடு முடிக்கவிருப்பம் இல்லை இதயம்வரை இழுத்துச்செல்ல விரும்புகிறேன் ....

117. நீண்ட தூரம் நீங்கி போனபிறகும் அதிகரித்து கொண்டே செல்கிறது உன் மீதுள்ள அன்பு.....

118. என் காதலை ஏற்றுகொண்ட மறுநொடியில் நட்சத்திரங்களோடு நடந்து செல்கிறேனடி .......இன்னும் எத்தனை மாற்றங்களோ என்னோடு...    

நொடிகளுக்கு நோய் வர காரணம்...

107. முகம் தெரிந்த நீ எனக்கு முக்கியமாய் தெரியவில்லை உன் உதடுகள் தெரிக்கும் அன்பில்லா வார்த்தைகளால்..... முகம் தெரியாத நீ எனக்கு முக்கியமாய் தெரிகிறாய் தொலைவில் இருந்தும், உன் உதடுகள் மலரும் அன்பான வார்த்தைகளால்....

*****

108. என் நிமிடங்கள் நிற்காமல்போனதற்கும் , என் நொடிகளுக்கு நோய்வரவும் அவளது காதலே காரணம்.....

*****

109. பிரிந்து செல்லும் பெண்ணே உன் பிரிவை என் இதழ்களும்,இமைகளும் ஏற்கிறது இதயம்மட்டும் உண்மையை உணரமறுக்கிறது...உன்வசம் இருப்பதால் தானோ...

*****

110. காலை சூரியன் அவளை காணமுடியாமல் கவலையோடு மறையும் பொழுதுதான் மாலை....

*****

 111. உன்னை பார்த்தஉடன் வருவது ஈர்ப்பு
உன்னை படித்தஉடன் வருவது பிடிப்பு
இருவரும் வாசித்தபின் வரும் நேசம்தான் காதல்.. .


*****

112. மனதின்வேர்வரை பெண்ணே உன் வாசனை