18 April 2014

உயிரோடு மரணமடி



இதழ்கள் அதிகம் இருந்தும்
பேசியதில்லை ரோஜா மலர்
உன் இதழ்கள் போல பேச தெரியலடி
கற்றுத்தா ரோஜாவுக்கு.....

முற்றுப்புள்ளி இட முடியும்
உன்னுள் இருக்கும் எதற்க்கும்
உன் அன்பிற்க்கு மட்டும்
முற்றுப்புள்ளியும் இட முடியாது...
முதல்புள்ளியும் இட முடியாது...

என்னை
கொன்றுவிடும் வார்த்தைகளையும்
வென்றுவிடும் வார்த்தைகளையும்
உன்னால் மட்டுமே தர முடியுமடி...

உன்னை விட முடியாது
என்று அடம்பிடிக்கும் அளவுக்கு
அன்பை அள்ளித்தந்துவிட்டாய் என்னிடம்....

தேநீர் அருந்தியும்
இதழ்கள் தேனாகவில்லை....
உன் பெயரை
உச்சரித்த ஒரு நொடியில் தேன்இதழ்கள் ஆனது....

மலையில் இருந்து விழுந்தும்
மரணம் இல்லை எனக்கு...
உன் மனதில் இருந்து விழுந்ததால்
உயிரோடு மரணமடி பெண்ணே....

கண்ணீர் அலைகள்



என் இமைகளுக்கு கனவானாய்
உன்னை காண முடியாத நொடிகளில் பெண்ணே...

என் உறக்கம் அடக்கமானது
அவளை கண்ட உறவிலிருந்து....

உன் உடை அருகே அமர்ந்து
உரையாடியதில் தான் உறைந்து போனேனோ உன்னிடமே....

தண்ணீரை காதலிக்கும்
பாறைக்கு முடிவு பாசம்...
உன்னை காதலிக்கும்
எனக்கு முடிவு கண்ணீர்தானடி...

உன் காதலால் காணாமல் போனேனோ?
இல்லை கனவில் காணாமல் போனேனோ?
பதில் தெரியவில்லை
ஆனால் உன் காதலை மட்டும் உணர்கிறேன்,,

எரிக்கும் தீயும்
என்னை பரித்த மனமும் ஒன்று
ஏனென்றால, அவள் தந்த வலிகள்
அனல் போல் எரிகின்றன என்னுள்....

கடல் தண்ணீரை
காதலிக்காத கரையை
கண்ணீர் அலைகள் மோதிபார்க்கின்றன....

வெண்ணிலவால் வெளிச்சம் இல்லை



அவள் இதழ் விழுந்த வார்த்தைகளால்
நழுவிச் சென்றது என் இதயம் அவளிடம்,,,,

பிரிந்து செல்லும் நீ
என்னை புரிந்து கொண்டால்
பிரிவுக்கு இடம் உண்டோ?
உனக்கும், எனக்கும் இடையில்...

கரை மோதும்
கடலையின் வேகம் கம்மி தான்...
என்னை மோதும்
அவளது மூச்சுக்காற்றின் வேகத்தை விட...

மேகத்தில் புதைந்திருக்கும்
வெண்ணிலவால் வெளிச்சம் இல்லை வானில்....
அவள் மனத்தில் புதைந்திருக்கும்
வார்த்தைகளால் வெளிச்சம் இல்லை என் வாழ்வில்...

அவளது தேகம் தொட
மழைச்சாரல் வரலாம்...
அவளது இதயம் தொட
என் அன்புச்சாரலால் மட்டுமே முடியும்...


மலரும் மலரெல்லாம்
மணப்பதில்லை எனக்கு...
அவள் கூந்தலில் சூடும் ஒற்றை மலர் போல...
 

14 April 2014

புன்னகை மொழிக்கு



உன் விரல் வரிக்கவிதை
என்னிடம் என்றுமே விற்பனையாகும்
ஏன் தெரியுமா?
என்றுமே நான் உன் ரசிகை...

நட்புவரிக்கவிதை-
முற்றுபுள்ளி இட முடியாதபயணம்

உன் புன்னகை மொழிக்கு
வார்த்தைகள் தேடி வருகின்றன,,,

கம்பிகள் இல்லா உள்ளச்சிறையில்
கைதியாக நடமாடுகிறேனடி...

உன் காதல் வெளியேற
இன்னும் எத்தனை நிமிடங்கள் தாமதமாகுமோ?

நீ என்னுள் வரும்முன் உன்னை தேடினேன்,,,
நீ என்னுள் வந்தபின் எனனை தேடினேன்...