இதழ்கள் அதிகம் இருந்தும்
பேசியதில்லை ரோஜா மலர்
உன் இதழ்கள் போல பேச தெரியலடி
கற்றுத்தா ரோஜாவுக்கு.....
முற்றுப்புள்ளி இட முடியும்
உன்னுள் இருக்கும் எதற்க்கும்
உன் அன்பிற்க்கு மட்டும்
முற்றுப்புள்ளியும் இட முடியாது...
முதல்புள்ளியும் இட முடியாது...
என்னை
கொன்றுவிடும் வார்த்தைகளையும்
வென்றுவிடும் வார்த்தைகளையும்
உன்னால் மட்டுமே தர முடியுமடி...
உன்னை விட முடியாது
என்று அடம்பிடிக்கும் அளவுக்கு
அன்பை அள்ளித்தந்துவிட்டாய் என்னிடம்....
தேநீர் அருந்தியும்
இதழ்கள் தேனாகவில்லை....
உன் பெயரை
உச்சரித்த ஒரு நொடியில் தேன்இதழ்கள் ஆனது....
மலையில் இருந்து விழுந்தும்
மரணம் இல்லை எனக்கு...
உன் மனதில் இருந்து விழுந்ததால்
உயிரோடு மரணமடி பெண்ணே....