28 May 2013

காதல் போர்வீரனடி


41. தலையணையின் அருகில் 
தூக்கம் வருவதில்லை
ஏன் தெரியுமா?
மனதின் அருகில்
நீ இருப்பதால் தான் பெண்ணே...!

******
42. அவள் இதழ் மலர்ந்த வார்த்தைகளை
தினமும் சூட நினைக்கிறேன்...!

******
43. நடந்து சென்ற என்னை
இடித்து சென்றது உன் கவிதை....
திரும்பி பார்த்தேன்
உன் ரசிகை ஆனேன்...

*****
44. இயல்பாய் இருக்கும் உன் அழகால்
என்னால் இயல்பாய் இருக்க முடியலடி...!

*****
45. என் கற்பனைக்கும் முடிவுண்டு
காதலியே
என்னுள் நீ வாழும் வரை...!

******
46. என்னுள் முடிவிலியாய் இருக்கும்
உனக்கு முடிவு தான் என்ன?

******
47. உன் இமைகளுக்கு எதிராக
ஆயுதங்கள் தேடும்
காதல் போர்வீரனடி...!

*****
48. என் இதயம் தொடும் உறவுகள் எல்லாம்
இறுதிவரை வருவதில்லை....
என் நண்பன் போல....

*****
49. உண்மை பேசும்
உறவுகள் ஊனமாக்குவதில்லை...
அவை பொய் பேசாத வரை....

******
50. புன்னகையும், கண்ணீரையும்
பரிசாக தருபவள்
உன் தங்கமான காதலி....

சுருங்கிய இதழ்கள்

31. உன் சுருங்கிய இதழ்கள்
என்னிடம் விரிவாக பேசுகின்றன்...
உன் விரிந்த இதயம்
என்னிடம் சுருக்கமாக பேசுகிறதே...

*******
32. போர்வாள் பெற்ற காயங்களை விட
அவளது விழிவாளல் பெற்ற காயங்களுக்கு
வலி அதிகம்....!

*******
33. உனது அசைவுகளுக்கு அடிமை ஆகி போனதால்
உயிர் இருந்தும் அசைவுகள் இல்லை என்னிடத்தில்....

*******

34. துன்பங்களே அறியாத
மழலையாக மாறி போனேன்....
இளங்கனாய் இருந்தும்...
பெண்ணே!
நீ என்னுடன் இருப்பதனால்...

*******
35. மொழி இருக்கும் போது
விழியால் ஏன் பேசுகிறாய்..
காரணம் கண்டறிந்தேன்
மொழியை விட
உன் விழியிடம் தான் வார்த்தைகள் அதிகம்...

*******
36. எனது நிமிடங்களும்
நினைவிழக்கின்றன...
உனதருகில் நிற்க்கும் போது பெண்ணே....

*******
37. உதடுகள் பிரியா
உன் மௌனத்தின்தாக்குதல், உயிரை பறிக்கும் மரணதாக்குதலைவிட கொடியதாகிறது .

*********
38. நேசித்தபின்
பிரிய
நினைப்பதென்பது, சுவாசித்தபின் மூச்சுக்காற்றை
பிரித்தெடுப்பதற்கு சமமாகும் .

*********
39. அவனது நினைவுக்குள் இதயம் மூழ்கும்வேளையில்,
பொழுதின்பெயர் மறந்துபோகின்றன
என் நினைவின்உயிர் இறந்துபோகின்றன . . .

********
40. உன்மீது காதல் பிறந்தநேரம்
தெரியாததால்,
காதலின் வயதை கண்டறியமுடிவில்லை கணிதமேதையாளும்

விழியின் மழை

21. உன் விரலுக்கிடையில் 
இடைவெளி இருப்பதால் தான்
உன் கவிதை வார்த்தைகளுக்கு இடையில்
இடைவெளி விடுகிறாயடா....!

******
22. அசையாத தண்ணீர் என்னிடம்...
கண்ணாடி
அசையும் தண்ணீர் நடனம்....
கடலிடம்... அலையாக

******
23. விழிக்காமல் இருக்க போகிறேன்.... காலைவரை
தூக்கம் என்னும் ஒரு சில நொடி இறப்புகளால்....

******
24. உன் வறண்ட உதடுகளுக்கு
ஈர நாக்கின் நுனி உண்டு...
உன் வ்றண்ட இதயத்துக்கு
என் ஈர காதல் உண்டு...

*****
25. என் மீது படும் உன் மின்சாரப்பார்வை
குறையும் போது
மண்ணுள் மறைய நினைக்கிறேன்,,,,

******
26. என் ஜன்னல் கம்பிகளுக்கு
சுவாசம் என்பதே
உன் மூச்சுக்காற்றுதான்...

******
27. மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...

*******
 28. காயங்களை தருவதில் ஆயுதம் தோற்றுப்போகும் அன்பிடம் ...

******
 29. ஆண்கவிஞர்களின்
அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை

******
30. விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ . . .


மென்மையான உதடுகளால்


11. கடலுக்கு கூட குறிப்பிட்ட ஆழம் தான்
என் காதலுக்கு குறிப்பிட முடியாத ஆழம்...

******
12. உன் மென்மையான உதடுகளால்
என்னை வன்மையாக பேசாதே....
அதனால் தான்
உன் உதடுகளுக்கு வறட்சி நிலவரம்....

******
13. உன் இதயத்தால் வருவதால் தான்
வார்த்தைகளும் இனிமையாகின்றன..
என் கவிதையில்....

*******
14. கம்பிகள் உள்ள சிறையில் கூட
தனிமை உணரவில்லை...
என் உள்ள சிறையில்
தனிமை தவிர வேறொன்றும் இல்லை...

*******
 15. எனது வாழ்க்கைக்கு உன்னிடம் பதில் எதிர்பார்த்து
வினாக்குறி இட்டேன்...
விடையளிக்க மறந்துவிட்டாயடி...

******
16. அவளது பார்வை அளிக்கும்
விடுமுறை நாட்கள் கம்மி தான்...
என் வாழ்நாட்களில்...

******
 17. கடற்கரை மணலுக்கும் காதல்பிறக்கும்
அவனது கால்தடங்களை காண்கையில் ...

*****
 18. அவனது வரவை நோக்கி
ஆவலோடு
வார்த்தைகள் பல கவிதையாக காத்துக்கிடக்கின்றன தூவலின் துளிகளிடம் ..

******
19. செயற்கை
அழகின்"உதவியால்" மிலிர்ந்திடும்
பெண்மையை விட,
இயற்கை அழகால்
இதயம்கவர்ந்திடும் ஆண்மையும் அழகென
அறிந்தேன் அவனால் ...


*****
20. தனக்காக எவருமில்லையென்ற எண்ணம் தலைதூக்கும் நேரத்தில்,
தனிமையை மட்டுமே சுவாசிக்கநினைக்கிறது இதயம் .. 


 

ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கவிதை



1. உன்னை பற்றி கவிதை எழுதமுடிகிறது,
ஆனால்
இறுதியாக கவிதை எழுத முடியவில்லை...
எல்லை இல்லை உன்னை எழுத...!

*******
2. உன்னிடம் இருந்து என்னை காக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும்
உன் ஒரு துளி பார்வையால் பாதிப்படைந்ததடி..!

*******
3. விடியும் பொழுதுகள் உன் முகத்திடம் விடிகின்றன...
தோன்றும் துன்பங்கள் உன் மடியில் மடிகின்றன....

********
4. அனைத்து உறவுகளுக்கும் பெயர் வைத்தேன்...
உனது உறவுக்கு மட்டும் பெயர் வைக்க தெரியவில்லை எனக்கு...

*******
5. உனது உதடுகளுக்கு நேராக
காதலிக்கிறேன் என்று சொன்னால்
உனது கண்கள் 
என்னிடம் நேராக பேசுவதில்லை....

********
6. பொய்களை சொல்லி சிரிக்க வைத்தேன் அவளை...
நான் சொன்ன காதலும் பொய்யென சிரித்து சென்றுவிட்டாள்...

*******
7. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கவிதை தான்
உனதருகே அமர்ந்தால்

*******
8. நிலா :-
நீ விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஓரிரவே உயிர்எழும்புகிறது என் நிம்மதி
ஏனெனில்,
உன் அசைவுகளை ரசிக்க யாருமில்லை என்பதால்


********

9. அதிக உறவுகளாலல்ல அன்பான உறவுகளாலே ஆயுளும் ஆளவிரும்புகிறது என்னை

********

10. அலங்காரமிடாத
நிலவுக்கும் அவனுக்கும் அழகுத்தேர்வாம் ...