5 July 2013

என் முதல் காதலி அம்மா

மழலையே! உன்னை கொஞ்சிக்கொண்டே, மிஞ்சிக்கொண்டு போயிருமோ இறைவன் வகுத்த வாழ்நாளைவிட என் வாழ்நாட்கள்......

என் முதல் காதலி அம்மா. இந்த காதலை மட்டும் இறைவன் எப்படி இணைத்துவைத்தானோ?.....

பகலில் திறந்த இமைகதவுகளை இரவில் பூட்டமுடியவில்லை ,இமைகளுக்கு இடையில் நீ புகுந்துள்ளாயே காதலனே...

அன்பை அள்ளித்தரும் ,ஆயுள்முழுவதும் அருகில் இருக்கும் பெண்கடவுளை கடனாக வாங்கினேன் அவள் தான் என் அம்மா.......

கண்ணா என் விரல்களுக்குள் மோதல் எவை உன்னை கவிதையாக முதலில் எழுதுவது என்று .......இந்த மோதலில் என் காதல் புரிகிறதா?......


மழழையே என் மனதை உன்னிடம் அடகுவைத்துவிட்டேன் மீண்டுவரவிருப்பம் இல்லை மீளவும்முடியவில்லை....அடைபட்டுவிட்டேன் உன் அசைவுகளிடம்.....

தன்னம்பிக்கை இருந்தால், "செயல்படமுடியாது" என்னும் வார்த்தை செயலிழந்துபோகும் உன்னிடத்தில்.....

No comments:

Post a Comment