28 May 2013

மென்மையான உதடுகளால்


11. கடலுக்கு கூட குறிப்பிட்ட ஆழம் தான்
என் காதலுக்கு குறிப்பிட முடியாத ஆழம்...

******
12. உன் மென்மையான உதடுகளால்
என்னை வன்மையாக பேசாதே....
அதனால் தான்
உன் உதடுகளுக்கு வறட்சி நிலவரம்....

******
13. உன் இதயத்தால் வருவதால் தான்
வார்த்தைகளும் இனிமையாகின்றன..
என் கவிதையில்....

*******
14. கம்பிகள் உள்ள சிறையில் கூட
தனிமை உணரவில்லை...
என் உள்ள சிறையில்
தனிமை தவிர வேறொன்றும் இல்லை...

*******
 15. எனது வாழ்க்கைக்கு உன்னிடம் பதில் எதிர்பார்த்து
வினாக்குறி இட்டேன்...
விடையளிக்க மறந்துவிட்டாயடி...

******
16. அவளது பார்வை அளிக்கும்
விடுமுறை நாட்கள் கம்மி தான்...
என் வாழ்நாட்களில்...

******
 17. கடற்கரை மணலுக்கும் காதல்பிறக்கும்
அவனது கால்தடங்களை காண்கையில் ...

*****
 18. அவனது வரவை நோக்கி
ஆவலோடு
வார்த்தைகள் பல கவிதையாக காத்துக்கிடக்கின்றன தூவலின் துளிகளிடம் ..

******
19. செயற்கை
அழகின்"உதவியால்" மிலிர்ந்திடும்
பெண்மையை விட,
இயற்கை அழகால்
இதயம்கவர்ந்திடும் ஆண்மையும் அழகென
அறிந்தேன் அவனால் ...


*****
20. தனக்காக எவருமில்லையென்ற எண்ணம் தலைதூக்கும் நேரத்தில்,
தனிமையை மட்டுமே சுவாசிக்கநினைக்கிறது இதயம் .. 


 

No comments:

Post a Comment