28 May 2013

விழியின் மழை

21. உன் விரலுக்கிடையில் 
இடைவெளி இருப்பதால் தான்
உன் கவிதை வார்த்தைகளுக்கு இடையில்
இடைவெளி விடுகிறாயடா....!

******
22. அசையாத தண்ணீர் என்னிடம்...
கண்ணாடி
அசையும் தண்ணீர் நடனம்....
கடலிடம்... அலையாக

******
23. விழிக்காமல் இருக்க போகிறேன்.... காலைவரை
தூக்கம் என்னும் ஒரு சில நொடி இறப்புகளால்....

******
24. உன் வறண்ட உதடுகளுக்கு
ஈர நாக்கின் நுனி உண்டு...
உன் வ்றண்ட இதயத்துக்கு
என் ஈர காதல் உண்டு...

*****
25. என் மீது படும் உன் மின்சாரப்பார்வை
குறையும் போது
மண்ணுள் மறைய நினைக்கிறேன்,,,,

******
26. என் ஜன்னல் கம்பிகளுக்கு
சுவாசம் என்பதே
உன் மூச்சுக்காற்றுதான்...

******
27. மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...

*******
 28. காயங்களை தருவதில் ஆயுதம் தோற்றுப்போகும் அன்பிடம் ...

******
 29. ஆண்கவிஞர்களின்
அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை

******
30. விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ . . .


No comments:

Post a Comment