28 May 2013

ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கவிதை



1. உன்னை பற்றி கவிதை எழுதமுடிகிறது,
ஆனால்
இறுதியாக கவிதை எழுத முடியவில்லை...
எல்லை இல்லை உன்னை எழுத...!

*******
2. உன்னிடம் இருந்து என்னை காக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும்
உன் ஒரு துளி பார்வையால் பாதிப்படைந்ததடி..!

*******
3. விடியும் பொழுதுகள் உன் முகத்திடம் விடிகின்றன...
தோன்றும் துன்பங்கள் உன் மடியில் மடிகின்றன....

********
4. அனைத்து உறவுகளுக்கும் பெயர் வைத்தேன்...
உனது உறவுக்கு மட்டும் பெயர் வைக்க தெரியவில்லை எனக்கு...

*******
5. உனது உதடுகளுக்கு நேராக
காதலிக்கிறேன் என்று சொன்னால்
உனது கண்கள் 
என்னிடம் நேராக பேசுவதில்லை....

********
6. பொய்களை சொல்லி சிரிக்க வைத்தேன் அவளை...
நான் சொன்ன காதலும் பொய்யென சிரித்து சென்றுவிட்டாள்...

*******
7. ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கவிதை தான்
உனதருகே அமர்ந்தால்

*******
8. நிலா :-
நீ விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஓரிரவே உயிர்எழும்புகிறது என் நிம்மதி
ஏனெனில்,
உன் அசைவுகளை ரசிக்க யாருமில்லை என்பதால்


********

9. அதிக உறவுகளாலல்ல அன்பான உறவுகளாலே ஆயுளும் ஆளவிரும்புகிறது என்னை

********

10. அலங்காரமிடாத
நிலவுக்கும் அவனுக்கும் அழகுத்தேர்வாம் ...








No comments:

Post a Comment