28 May 2013

காதல் போர்வீரனடி


41. தலையணையின் அருகில் 
தூக்கம் வருவதில்லை
ஏன் தெரியுமா?
மனதின் அருகில்
நீ இருப்பதால் தான் பெண்ணே...!

******
42. அவள் இதழ் மலர்ந்த வார்த்தைகளை
தினமும் சூட நினைக்கிறேன்...!

******
43. நடந்து சென்ற என்னை
இடித்து சென்றது உன் கவிதை....
திரும்பி பார்த்தேன்
உன் ரசிகை ஆனேன்...

*****
44. இயல்பாய் இருக்கும் உன் அழகால்
என்னால் இயல்பாய் இருக்க முடியலடி...!

*****
45. என் கற்பனைக்கும் முடிவுண்டு
காதலியே
என்னுள் நீ வாழும் வரை...!

******
46. என்னுள் முடிவிலியாய் இருக்கும்
உனக்கு முடிவு தான் என்ன?

******
47. உன் இமைகளுக்கு எதிராக
ஆயுதங்கள் தேடும்
காதல் போர்வீரனடி...!

*****
48. என் இதயம் தொடும் உறவுகள் எல்லாம்
இறுதிவரை வருவதில்லை....
என் நண்பன் போல....

*****
49. உண்மை பேசும்
உறவுகள் ஊனமாக்குவதில்லை...
அவை பொய் பேசாத வரை....

******
50. புன்னகையும், கண்ணீரையும்
பரிசாக தருபவள்
உன் தங்கமான காதலி....

No comments:

Post a Comment