5 June 2013

ஒரு துளி துன்பம்

66. காயங்கள் பட போர்களம் போக வேண்டாம்...
பார்க்காமல் நீ போகும் பார்வையே போதும்...!

67. அடக்க முடியாத கோபமும்
உன் மீதுள்ள
அளவிட முடியாத அன்பால் தான் வருகிறது....!

68. நம் இருவருக்கிடையில்
இருக்கும் இடைவெளியும் இன்பம் தான்
அதை நிரப்ப யாரும் வரதாவரையில்...!

69. நீ விரும்புவதற்காக கவிதை எழுதவில்லை...
உன்னை விரும்புவதற்க்காக தான் கவிதை எழுதுகிறேன்...!

70. தரை விழ வரும் மழைத்துளி
ஜன்னல் கம்பியில் கோர்த்து பூமாலையாகிறது..
கம்பியின் மீதுள்ள காதலால் தானோ...!

71. உன் பலதுளி அன்பை தாங்கும் என் இதயம்
ஒரு துளி துன்பம் தாங்க காயமாகிறது...!

72. வானின் கண்ணீரை ஏந்த பூமியுண்டு...
என் கண்ணீரை ஏந்த நீயுண்டு...!

2 comments:

  1. OUR HEART IS SO WEAK TO BEAR DISTRESS.

    ReplyDelete
  2. WE HAVE TO FACE DISTRESS MISERY ADVERSITY HARDSHIP GRIEF SUFFERING TRAGEDY DISEASE AND SORROW IN LIFE. UNAVOIDABLE.

    ReplyDelete