1 June 2013

மைவிழிகள் தானே விரல்கள்

61. வெள்ளைவானம் கருப்பாக மாறாமல் போனால்
கொள்ளை இரவை காண முடியாமல் போயிருக்கும்...
என் கவிதை வரிகளை நீ வாசிக்காமல் போனால்
உன் வெள்ளை அன்பை காண முடியாமல் போயிருப்பேன்...!

62. கனவுகள் என்பது இல்லாமல் போனது
எனது இரவுகளில்
என் அருகிலே நீ உறங்க்கினால்...!

63. இருக்கும் இருவிழியால்
என்ன கதை சொல்ல போகிறாய்
என்னிடம்... பெண்ணே...!

64. உன் ஒரு துளி பார்வையால்
என்னுள் எத்தனை கண்ணீர்துளிகள்
அதிலும் உன் பெயர் எழுதி ரசிக்கிறேனடி...!

65. எழுதுகோலே இல்லாமல் இதயத்தில் எழுதியுள்ளாய்
உன் பெயரை
அது எப்படி?
உன் மைவிழிகள் தானே விரல்கள் ஆனது என் இதய்த்திடம்...!
மழைத்துளிகள் கூட
உன் பெயரை
என் மீது வரைந்து செல்கின்றதே....!


No comments:

Post a Comment