2 July 2013

நொடிகளுக்கு நோய் வர காரணம்...

107. முகம் தெரிந்த நீ எனக்கு முக்கியமாய் தெரியவில்லை உன் உதடுகள் தெரிக்கும் அன்பில்லா வார்த்தைகளால்..... முகம் தெரியாத நீ எனக்கு முக்கியமாய் தெரிகிறாய் தொலைவில் இருந்தும், உன் உதடுகள் மலரும் அன்பான வார்த்தைகளால்....

*****

108. என் நிமிடங்கள் நிற்காமல்போனதற்கும் , என் நொடிகளுக்கு நோய்வரவும் அவளது காதலே காரணம்.....

*****

109. பிரிந்து செல்லும் பெண்ணே உன் பிரிவை என் இதழ்களும்,இமைகளும் ஏற்கிறது இதயம்மட்டும் உண்மையை உணரமறுக்கிறது...உன்வசம் இருப்பதால் தானோ...

*****

110. காலை சூரியன் அவளை காணமுடியாமல் கவலையோடு மறையும் பொழுதுதான் மாலை....

*****

 111. உன்னை பார்த்தஉடன் வருவது ஈர்ப்பு
உன்னை படித்தஉடன் வருவது பிடிப்பு
இருவரும் வாசித்தபின் வரும் நேசம்தான் காதல்.. .


*****

112. மனதின்வேர்வரை பெண்ணே உன் வாசனை    

No comments:

Post a Comment