2 July 2013

கடல்தண்ணீரும் கண்ணீரோடு.....

119. பெண்ணே என் காதலை ஏற்காமல்கூட போய்விடு அதை ஏற்கமுடியும் என்னால்....காதலித்துவிட்டு காணாமல் போகாதே அதை ஏற்கமுடியாது என்னால்.....

120. மழையில் நனையவிடாமல் வெண்ணிலவை மறைத்து வைத்துள்ளது வானம் இதல்லவா அன்பு.....

121. பெண்ணே நீ வாங்க மறுத்த என் இதயம் உன் வாசனைகளோடு மண்ணோடு வாழ்ந்து மடியுமே தவிர வேர எந்த பெண்ணோடும் வாழாது..

123. ஆரம்பத்தில் கடல்தண்ணீரும் அமைதியாகத்தான் அமர்ந்தது மண்ணில் எந்த பெண்ணின் விரல் பட்டதோ தெரியவில்லை, அலையாக அசைய ஆரம்பித்தது அவளைத்தேடி....கடல்தண்ணீரும் கண்ணீரோடு.....

124. மரத்தின் வேர்களுக்கும் மறைவான காதல்தானா மண்ணோடு.....

125. பெண்ணே என் இதயத்தின் விழிகளுக்கு உறக்கமே இல்லை உன்னை கண்டநாள் முதல்....    

No comments:

Post a Comment