18 April 2014

கண்ணீர் அலைகள்



என் இமைகளுக்கு கனவானாய்
உன்னை காண முடியாத நொடிகளில் பெண்ணே...

என் உறக்கம் அடக்கமானது
அவளை கண்ட உறவிலிருந்து....

உன் உடை அருகே அமர்ந்து
உரையாடியதில் தான் உறைந்து போனேனோ உன்னிடமே....

தண்ணீரை காதலிக்கும்
பாறைக்கு முடிவு பாசம்...
உன்னை காதலிக்கும்
எனக்கு முடிவு கண்ணீர்தானடி...

உன் காதலால் காணாமல் போனேனோ?
இல்லை கனவில் காணாமல் போனேனோ?
பதில் தெரியவில்லை
ஆனால் உன் காதலை மட்டும் உணர்கிறேன்,,

எரிக்கும் தீயும்
என்னை பரித்த மனமும் ஒன்று
ஏனென்றால, அவள் தந்த வலிகள்
அனல் போல் எரிகின்றன என்னுள்....

கடல் தண்ணீரை
காதலிக்காத கரையை
கண்ணீர் அலைகள் மோதிபார்க்கின்றன....

No comments:

Post a Comment