14 April 2014

உன் இமைகள் மடிக்காதே



அம்மாவின் இடையில்
அமர்ந்து செல்லும் மழலையின் பயணம் போல்,
தலைவா! என் ஜன்னலோரம்
உன் முகம் பயணம் செய்கிறதடா...

பேருந்தில் ஜன்னலோரம்
பேசிக் கொண்டே வருகிறதே
உன் கூந்தல்...

தொலைதூரத்தில் இருந்தாலும்
எனதருகே இறங்கினாய்
காதலனாக, தொலைந்தது
என் தூக்கம் தான்,,,

உன் இமைகள் மடிக்காதே...
என் இதயம் துடிக்காதே...

மௌனமாகாதே....
சொற்கள் ஊனமாகுதே...

கூரையில் விழும் பூக்கள் போல
என் அன்பு உதிர்ந்துள்ளது
உன் மேல்...
மேல் இமை கொண்டு
மேல் நோக்கி பாரடி....

No comments:

Post a Comment