காதல் ஏற்றால் இதய
ஒளியில் இதயம் வாழும்...
காதல் ஏற்க மறுத்தால்
இருள் ஒளியில் இதயம் வாழும்...
உன் ஒரு வரிக்கவிதையும்
என்னுள் நூலகமானது...
உன் இதழ் வரும் வார்த்தை
என் இதயம் கொள்ளும்
நேரமிது...
துளிர்விட்ட காதலை
தூக்கியெரிந்தாயடி
தீப்பந்தமாய்...
வாழ்க்கையில் வந்த உணர்வுகளை
விட
வார்த்தையால் வந்த
உணர்வுக்கு தான் வேகம் அதிகம்....
பேனா கிறுக்கலுக்கு
வடிவம் உண்டு,
இந்த பெண்ணின்
கிறுக்கலுக்கும்
உயிரும், உருவமும்
உண்டு...
ஆனால்
மௌனமாக தான் பேசும்
பேனா மாதிரி,,,
No comments:
Post a Comment