14 April 2014

பாதரசம் பூசிய கண்ணாடியோ?



உன் காதல் படிக்கட்டுகள்
இன்னும் எத்தனை...?
இதயக்கால்கள் வலிக்கிறது... படி ஏற முடியாமல்.
இரக்கம் காட்டடி பெண்ணே...

தோழா!!!
உன் பயணத்தோடு இருந்தால்
தடைக்கற்கள் கூட தரையோடு மறையும்....

வெள்ளைத் தாளை வண்ணமயமாக்கினேன்..
உன் பெயரை எழுதி...

நான் விரும்பும் மனம்
பாதரசம் பூசிய கண்ணாடியோ?
என் பிம்பம் வாங்கி,
துன்பம் தருகிறதே....

நிழல் வரிக்கவிதை, உன் நிஜத்திடம் திருடியது...

காதலின் கற்பனையில்
சித்தன்னவாசல் ஓவியங்கள் கூட
சீக்கிரம் கரையும்...

என் நிழல் சாய்ந்து பார்த்ததுண்டு...
என் நிஜம் உன்னைவிட்டு எவரிடமும் சாய்வதில்லை...

No comments:

Post a Comment