3 April 2014

அழகின் கவிதை

உதடுகள் பிரியா 
உன் மௌனத்தின்தாக்குதல், 
உயிரை பறிக்கும் மரணதாக்குதலைவிட கொடியதாகிறது .

*********

நேசித்தபின் 
பிரிய நினைப்பதென்பது, 
சுவாசித்தபின் 
மூச்சுக்காற்றை பிரித்தெடுப்பதற்கு சமமாகும்...

**********

அவனது நினைவுக்குள் இதயம் மூழ்கும்வேளையில்,
பொழுதின்பெயர் மறந்துபோகின்றன 
என் நினைவின்உயிர் இறந்துபோகின்றன . . .

*********

உயிர்வாழ இரவலாய் உன்நினைவை வாங்கினேன்
இறுதியில் உன்நினைவிடம் இரையாகிப்போனது என்னுயிர் . . .

**********

கல்லறையில் விழும் கண்ணீர்துளிகள் கணக்கிடும் 
நம் அன்பானவர்களின் பட்டியலை 

*******

உன்மீது காதல் பிறந்தநேரம் 
தெரியாததால்,
காதலின் வயதை கண்டறியமுடிவில்லை கணிதமேதையாளும் 

*******

இதயத்தின் 
கவிதை-காதல்
இமையின் 
கவிதை-கண்ணீர் 
கடலின் 
கவிதை-அலை
கல்லின்
கவிதை-சிலை
மலரின்
கவிதை-மௌனம்
மழையின்
கவிதை-மண்வாசம்
ஊஞ்சலின்
கவிதை-ஊமைதாலாட்டு
தொட்டிலின்
கவிதை-உண்மைதாலாட்டு
வேரின்
கவிதை-கனி
வேலியின்
கவிதை-காவல்
ஏணியின்
கவிதை-உயரம்
ஏமாற்றத்தின்
கவிதை-துயரம்
வெட்கத்தின்
கவிதை-பெண்
வீரத்தின்
கவிதை-ஆண்
விடியலின்
கவிதை-ஜனனம்
விஷத்தின்
கவிதை-மரணம்
வினாவின்
கவிதை-விடை
விதியின்
கவிதை-வாழ்க்கை
நட்பின்
கவிதை-நம்பிக்கை
அனாதைகளின்
கவிதை-அழுகை
அன்பின்
கவிதை-அன்னை
ஆசையின்
கவிதை-துன்பம்
அழகின்
கவிதை-அவன் . . .


***********


No comments:

Post a Comment