18 April 2014

வெண்ணிலவால் வெளிச்சம் இல்லை



அவள் இதழ் விழுந்த வார்த்தைகளால்
நழுவிச் சென்றது என் இதயம் அவளிடம்,,,,

பிரிந்து செல்லும் நீ
என்னை புரிந்து கொண்டால்
பிரிவுக்கு இடம் உண்டோ?
உனக்கும், எனக்கும் இடையில்...

கரை மோதும்
கடலையின் வேகம் கம்மி தான்...
என்னை மோதும்
அவளது மூச்சுக்காற்றின் வேகத்தை விட...

மேகத்தில் புதைந்திருக்கும்
வெண்ணிலவால் வெளிச்சம் இல்லை வானில்....
அவள் மனத்தில் புதைந்திருக்கும்
வார்த்தைகளால் வெளிச்சம் இல்லை என் வாழ்வில்...

அவளது தேகம் தொட
மழைச்சாரல் வரலாம்...
அவளது இதயம் தொட
என் அன்புச்சாரலால் மட்டுமே முடியும்...


மலரும் மலரெல்லாம்
மணப்பதில்லை எனக்கு...
அவள் கூந்தலில் சூடும் ஒற்றை மலர் போல...
 

No comments:

Post a Comment