31 December 2013

கருவிழி உடைந்து கண்ணீர் ஓடும்

கருவறையில் உதைத்தேன் சினம்கொள்ளமால் சிரித்தாள்...

கருவறையைவிட்டு இறங்கும்வரை 
இரத்தத்தை இரையாக்கினாள்...

உறுப்புகள் உருவாகும்வரை இடம்கொடுத்தாள் கருவறையில்....

நடமாடும்வரை இடம்கொடுத்தாள் இடையில்....

மரணம்வரை
இடம்கொடுத்தாள்
மனதில்....

உன் உறக்கத்தை உறிஞ்சி உயிர்வாழ்ந்த என்னை
இதுவரை
உன்னை மிஞ்சி யாரும் நேசிக்கவில்லை....


**********

விலகிநின்று
விரும்பு...
விரும்பியபின்
விலகாதே...


*********

விளக்கின் மதிப்பு
வெளிச்சம் விலகையில் தெரியும்....

உள்ளத்தின் மதிப்பு
உயிர் விலகையில் 
தெரியும்...

அன்பின் மதிப்பு
அருகாமை விலகையில் தெரியும்....


********

உன் கருவிழி
ஓரப்பார்வை தூவிபோகையில், கவிதைவரும் காகிதத்தோடு....
உன் கருவிழி
பாராமல்போகையில், கண்ணீர் வரும் கண்ணங்களோடு....



*********

அடித்துவிரட்டினாலும் அருகாமையை திருடும் சிலரது நினைவுகள்....
துரத்திபோனாலும்
தூரம் போகும் 
சிலரது நினைவுகள்....
கண்ணீராய் வரும்
சிலரது நினைவுகள்....
கனவாய் வரும்
சிலரது நினைவுகள்....
உயிர்வாழ
உணவாய் வரும்
சிலரது நினைவுகள்....


********

காயங்கள் மோத,
கருவிழி உடைந்து கண்ணீர் ஓடும்....
மரணம் மோத,
மனம் உடைந்து
காதல் ஓடுமா?....


**********

என்றோவரும்
இறப்பை நினைத்தே இதயம் வாழ்ந்தால்,
இழக்கும் இன்பத்தை...

உனக்காக உண்டான நொடிகள், 
நோய்கண்டு
வாழமுடியாமல் வாடும்...

இன்பமாலையை இதயம் சூடநினைத்தால் மட்டுமே
மணக்கும் மனது....
பிறக்கும் புன்னகை...
இறக்கும் காயங்கள்...
கசக்கும் கண்ணீர்...
இனிக்கும் இன்பம்.


********

1 comment:

  1. நினைவுகள் பற்றிய வரிகள் மிக அருமை சகோதரி

    ReplyDelete