4 May 2014

சிரிப்பின் நீளம் அதிகம்

மழலையே,,,
உன் தெளிவில்லாத வார்த்தைகளும்
என்னிடம் விடை கேட்டு
தேங்கி நிற்கிறது... தேனாக...!


மழலையே,,,
சோகங்கள் அறியாத உனக்கும்
ஏன் கண்ணீர் வடிகின்றதோ...!

மழலையே,,,
உனது கால்தடங்களால்
பூமிக்கு ஏற்பட்ட காயங்கள் எத்தனையோ???


மழலையே,,,
உன்னிடம் தான் கடவுளும் கடன் வாங்கி சென்றுள்ளாரோ??
உன் மின்னல் புன்னகையை...!


மழலையே,,,
உன் சிரிப்பின் நீளம் அதிகம்...
அதனால் தான்
என்னை உன்னிடம் கட்டிப்போட்டுள்ளாயா???


மழலையே,,,
உன் ஒற்றை புன்னகையில்
என் கற்றை துன்பம் காணாமல் போனது...!


மழலையே,,,
உன் ஒற்றை விரல் தொட்டு சென்றதில்
என் கனமான மனம் கரைந்து போனது...!

No comments:

Post a Comment