26 May 2014

கண்ணீரை செலவிட்டு

மின்சார உணவால் இயங்கும் இயந்திரமனிதன் போல,
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால்
இயங்குகிறது
எந்தன் இதயமடி...

*******

"பிரிவென்பது"-
உறவைமுறிக்க
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்...
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...

*******

உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும்
"இதயம்"
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு
"இருவிழிகள்"
உணர்ந்த தருணமே அதிகம்......

********

உயிர்கள்
வாழாமல்போனால்
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...

*******

பெண்ணே!
உன்னை கண்டதும்
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...

********

கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை...
கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை...
இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...

********

கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்...
கருவிழிகளின்குணமும் அதுவென்றே
"அவளால்" இன்று  புரிந்தேன்...

********

பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு..

********





 

No comments:

Post a Comment