8 May 2014

நிலவுக்கும் அவனுக்கும்

நிலா :-
நீ விடுமுறை எடுத்துக்கொள்ளும் ஓரிரவே உயிர்எழும்புகிறது என் நிம்மதி
ஏனெனில்,
உன் அசைவுகளை ரசிக்க யாருமில்லை என்பதால்

*******

அதிக உறவுகளாலல்ல அன்பான உறவுகளாலே ஆயுளும் ஆளவிரும்புகிறது என்னை

********

அலங்காரமிடாத
நிலவுக்கும் அவனுக்கும் அழகுத்தேர்வாம் ...

********

மண்ணின்கீழ்
வாழ்ந்தும்
மரத்தின் வேருக்கு
தொடர்கிறது சுதந்திரம்...

********

செயற்கை
அழகின்"உதவியால்" மிலிர்ந்திடும்
பெண்மையை விட,
இயற்கை அழகால்
இதயம்கவர்ந்திடும் ஆண்மையும் அழகென
அறிந்தேன் அவனால் ...


********

வாசனையிருந்தும்
அவள் கூந்தலை தேடி இறக்கின்றன பூக்கள்
அதைப்போல
வாழவழியிருந்தும் அவளை தேடி இறக்கின்றன என்நாட்கள்....


********

நிழலில்லா நிலவின் மொழியும்
நீயில்லா நினைவின் மொழியும் பொய்யே . . .


********

விழியின்மழை
விதைத்த வினா :-
இதயத்தைவிட உன்மேல்
அதிகம் பிரியம்சுமப்பது இருகண்கள்தானோ?


********

ஆண்கவிஞர்களின் அழகான கவிதைகள்
அளவின்றியும் வாழவிரும்பும்
ஆனால்
அவளின்றி வாழவிரும்புவதில்லை ...


*********


 

No comments:

Post a Comment