8 May 2014

இரத்தமென்னும் உணவால்

அன்பு என்பதும் சுற்றிதிரியும் காற்றைபோலத்தான் உன்அருகில் நின்றாலும் அதன் உருவம் தெரிவதில்லை உனக்கு நீ சுவாசிக்காத வரையில்....

*******

அவளது கண்பாராமல் கவிதை எழுதிவைக்கிறேன் என்னைவிட என்கவிதையை அதிகம் நேசித்துவிடுவாளோ என்னும் பயத்தால்......

********

அவளது இதயத்தின் ஓசையால் இசை தேவைப்படவில்லை,
அவளது உடல்வெப்பத்தால் கதிரவன் தேவைப்படவில்லை,
அவளது மூச்சுக்காற்றால் சுவாசிக்க காற்றும் தேவைப்படவில்லை,
அவளது கருவறையால் வசிக்க பூமியும் தேவைப்படவில்லை,
அவளது இரத்தமென்னும்உணவால் ஆதாரமும் தேவைப்படவில்லை,அவளால் ஆண்டவனும் தேவைப்படவில்லை,
கடவுள்,காற்று,நிலம்,ஆதாரம்,வெளிச்சம் இவை தேவைப்படாமல் உயிர்வாழ்ந்தேன் அன்னை கருவறைக்குள் ........


********

வானமும் பேசும் இடிஓசையுடன்,
வானமும் கண்ணீர்வடிக்கும் மழைத்துளியுடன்,
வானமும் நாணம்காணும்
செந்நிறத்துடன்,
வானமும் மின்னல் அலங்காரத்தில் மின்னும் மின்னலுடன்,
வானமும் காதல் கொண்டது வெண்ணிலவுடன்,
வானமும் ஆடை அணிந்தது பகலுடனும் இரவுடனும்..........


*******

இடி மின்னல் தாக்காதபோதுதான் புரிந்தது பூமியில்வசித்தும் வானம்தாண்டி தாயின் கருவறையில் குழந்தையாக வசிக்கிறேனென....

*******

அன்பை உன்னருகில் இருக்கும்போது உணரவில்லை உன்அன்பைதேடி
அலையும்போது உணர்கிறேன் உன்னை.... கண்ணருகில் கண்ணீரும் நெஞ்சத்தின்அருகில் நினைவும் மட்டுமே என்னருகில் நிற்கிறது.....


******

கவலைகளை தாங்கும்போது கணமாவதும்,
காதலை
தாங்கும்போது
மாயமாவதும்,
இன்பங்களை தாங்கும்போது இதமாவதும்,
அன்பை
தாங்கும்போது அழகாவதும்,
மனித இதயம் மட்டுமே......


*******

உதிர்ந்து இறப்பதே மலரின் இறுதிநொடிஆசை
உருகி இறப்பதே மெழுகின் இறுதிநொடிஆசை
உன் அன்பால்உருகி உயிர் உதிர்வதே என் இறுதிநொடிஆசை.....


*******

       

No comments:

Post a Comment