கடற்கரை மணலுக்கும் காதல்பிறக்கும்
அவனது கால்தடங்களை காண்கையில் ...
******
மழைத்துளிகள் மண்ணில்எழுதிய கவிதைகளை
கண்கள் கவனிக்க
மறந்தவேளையிலும், மழைத்துளிகள் செய்யவிரும்பிய சேவையை செவி
சாய்த்துகேட்க மறுத்தவேளையிலும்,
சுவாசப்பாதையில் வேறுன்ற ஆசைப்பட்ட வெப்பக்காற்றை வெல்லவந்தது மழையின்தூதாக மண்வாசம் .....
******
தவழும்நேரத்தில் அன்னை
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத
கணம் கொடியதாகிடும்...
*******
பிறப்பதும் இறப்பதும் நிலவின்
வாடிக்கை...
இறப்பில்லாமல் இருப்பது
அன்பே! உன் நினைவின்
வேடிக்கை...
*********
என் கவிதையின் கால்கள்
பெண்ணே! உன்னை
வருட முயற்சிக்க அழைந்ததைவிட,
திருட முயற்சிக்க அழைந்ததே அதிகமடி...
********
உன் நிஜத்தின் பின்னால்
நிழல்
அழைந்ததைவிட,
உன் நினைவின் பின்னால்
நான்
அழைந்ததே அதிகமடி.....
********
ததும்பும் உன் நினைவிடமிருந்து தப்பிப்பிழைத்திட முடியாமல்
தவிக்கிறேனடி...
********
உன்னை என்னிதயம் மறக்கநேர்ந்தாலும் இதழ்கள் மறக்கவிடுவதில்லை, மற்றவரின் பெயரைமறந்து உன்பெயரை உளறிக்கொண்டே இருக்கிறது ....
*********
தவழும்மழலைபோல் தவழ்கிறாய் வானில் இரவு நேரங்களில்,
தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் மலர்கிறாய் ஆகாயதோட்டத்தில்,
அடுக்குமாடிகட்டிடத்தில் நின்று கரங்கள்நீட்டி தொடமுயற்சிக்கிறேன் உன்முகத்தை வானிலவே! ஓடுகிறாய் நாணத்தால்........
*********
ஒற்றுமையை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அந்நியர்களை வெளியேற்றியதை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அடிமைவாழ்க்கை சிதைந்துபோனதை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......
உயிரின் தியாகத்தை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......
*********
அவனது கால்தடங்களை காண்கையில் ...
******
மழைத்துளிகள் மண்ணில்எழுதிய கவிதைகளை
கண்கள் கவனிக்க
மறந்தவேளையிலும், மழைத்துளிகள் செய்யவிரும்பிய சேவையை செவி
சாய்த்துகேட்க மறுத்தவேளையிலும்,
சுவாசப்பாதையில் வேறுன்ற ஆசைப்பட்ட வெப்பக்காற்றை வெல்லவந்தது மழையின்தூதாக மண்வாசம் .....
******
தவழும்நேரத்தில் அன்னை
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத
கணம் கொடியதாகிடும்...
*******
பிறப்பதும் இறப்பதும் நிலவின்
வாடிக்கை...
இறப்பில்லாமல் இருப்பது
அன்பே! உன் நினைவின்
வேடிக்கை...
*********
என் கவிதையின் கால்கள்
பெண்ணே! உன்னை
வருட முயற்சிக்க அழைந்ததைவிட,
திருட முயற்சிக்க அழைந்ததே அதிகமடி...
********
உன் நிஜத்தின் பின்னால்
நிழல்
அழைந்ததைவிட,
உன் நினைவின் பின்னால்
நான்
அழைந்ததே அதிகமடி.....
********
ததும்பும் உன் நினைவிடமிருந்து தப்பிப்பிழைத்திட முடியாமல்
தவிக்கிறேனடி...
********
உன்னை என்னிதயம் மறக்கநேர்ந்தாலும் இதழ்கள் மறக்கவிடுவதில்லை, மற்றவரின் பெயரைமறந்து உன்பெயரை உளறிக்கொண்டே இருக்கிறது ....
*********
தவழும்மழலைபோல் தவழ்கிறாய் வானில் இரவு நேரங்களில்,
தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் மலர்கிறாய் ஆகாயதோட்டத்தில்,
அடுக்குமாடிகட்டிடத்தில் நின்று கரங்கள்நீட்டி தொடமுயற்சிக்கிறேன் உன்முகத்தை வானிலவே! ஓடுகிறாய் நாணத்தால்........
*********
ஒற்றுமையை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அந்நியர்களை வெளியேற்றியதை நினைவுகூர்வது
சுதந்திரம்.......
அடிமைவாழ்க்கை சிதைந்துபோனதை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......
உயிரின் தியாகத்தை
நினைவுகூர்வது
சுதந்திரம்.......
*********
No comments:
Post a Comment