8 May 2014

உருகாத பனிகட்டி

வாய்வார்த்தைகள்கூட அடைபட்டுகிடந்தன அந்நியனிடம்......
நம்மை வாய்திறந்து பேசவைக்க உயிரை தியாகம்செய்தவர்களின் வரலாறை மட்டுமல்ல அந்நியனை அடித்துவிரட்டிய வீரர்களையும் நினைவில் நிற்கவைக்கும் இனியநாளே நாளை.....
பலரது உடலோடும் இரத்தம் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டே மண்ணில் ஓடியது இப்போது சுதந்திரமாக வாழும் நம்மனதிலும் மகிழ்ச்சியோடு ஓடுகிறது..


******

நமக்காக சுழலும்பூமி நின்றுபோனாலும் நம்மிடையே சுழலும் நட்பு நின்றுபோவதில்லை.....
ஆயிரம் ஆண்டுகள் உன்னருகில் வாழ்ந்தாலும் என்இதழ் நீ என்னமதமென்று கேட்கநினைப்பதில்லை....
நிலையில்லா பணத்தை மதிக்காமல்,
நிலையான உன்குணத்தை
மதித்து மலரும் நல்லுறவே நம்நட்பு....


******

எதிர்பார்க்கும் உறவுகள் அன்பாய் இருப்பதில்லை...
எதிர்பார்க்கபடாத உறவுகள்
அன்பாய் இருக்கின்றன....
கிடைக்காத அன்புக்காக கண்ணீர்சிந்துவதை விட
கிடைத்த அன்புக்காக புன்னகையை சிந்தலாம்...


******

வெயிலின் பார்வைபட்டு உருகாத
பனிகட்டிஇல்லை.......
அன்பின் பார்வைபட்டு
உருகாத
உயிரும்இல்லை..


******

பேனாவின் முனையைப்போல இதழின் வார்த்தையும் கூர்மையானதென........ சிலநேரங்களில்
வெல்லும்,
சிலநேரங்களில் கொல்லும்என இரு தருணங்களை உணரும்போது தெளிவுபெறும் உண்மை......


*******

நிஜமான நட்பு நிறம்பார்க்காது,
அன்பான நட்பு
முகத்தின்அழகை பார்க்காது,
இனிய நட்பு
இதழின் குரல்தன்மையை
கேட்காது,
பிரியமான நட்பு
பிரிய நினைக்காது,
உண்மையான நட்பு
என்றுமே உடைய விரும்பாது,
ஆழமான நட்பு
எதையும்
எதிர்பாராது.....


******

பெண்ணே! உன் இதயத்திற்கு என்னை விரும்பமட்டும்தான் தெரியுமென நினைத்தேன் உள்ளத்திற்குள்ளே வந்தபிறகுதான் தெரிந்தது என்னை வெருக்கவும் தெரியுமென.....     

No comments:

Post a Comment