26 May 2014

வரலாறில் வருவேனோ

இனம்பாராமல் தொட்டுசெல்லும்
காற்றை
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது
உண்மையான காதல்...


******

நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும்
தோழனாக
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...
 
*******
 
பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக,
உடலை துண்டாக்கி
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை...
இப்படிக்கு,
ரோஜா.
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?
 
*******
 
பாவையே!
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும்,
தாக்குதல் நடத்திய பார்வையால்
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும்
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும்,
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...
 
********
 
கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...
 
*******
 
காலைவானில் காணமால்போகாமலிருக்க ஆகாயநிலவிற்கு
ஆக்ஸிஜன் அனுப்பி உயிர்அளித்தேன்...
உயிர்பூத்த நிலவாலும் உள்ளத்தில்பூத்த உன்னாலும்
அகிலமும் அகமும் அழகானதடி...
இரத்தநாளங்களில்
கவிதைகளாய் வழிந்து நரம்பில் நடனமாடி இறுதியில் இதயம் சேர்ந்தாயடி...
தூங்கா துடிப்பாகி உன்ஆழ்மனதுள் ஆயுள்கரைப்பேனடி...
விழிகளை விடியல்உரசும்வரை உணரவில்லை
கண்ணோடு
வாழ்ந்தது கனவென...
கனவுகலைந்த பிறகு புரிந்தது வாழ்ந்தது பெண்ணே!
உன் நினைவென...

*******

ஊஞ்சலாடும் பார்வைகள் ஏனோ உனைகண்டதும் ஊனமானதோ...
கதை பேசும் விழிகள் ஏனோ உனைகண்டதும் கவிதைபேசுதோ...
ஊமை விழிகள்
ஏனோ உனைகண்டதும்
உரையாடுகிறதோ...

இரவின் இருளில் உறங்கிய இருவிழிகள் ஏனோ
உனைகண்டதும் உறக்கத்தை தொலைத்ததோ...
உருவம் வாங்கி உயிர்வாழ்ந்த விழி ஏனோ
உனைவாங்கியதும்
உறைந்துபோனதோ...

********

உன்னை எழுத தமிழிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால்
வரலாறில் வருவேனோ...

**********
 
 
  

 

No comments:

Post a Comment