பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக,
உடலை துண்டாக்கி
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை...
இப்படிக்கு,
ரோஜா.
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?
*********
பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..
*********
பாவையே!
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும்,
தாக்குதல் நடத்திய பார்வையால்
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும்
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும்,
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...
***********
மலரின் வாசம்
குடிக்கவந்த வண்டுகள் போலவே
மனதின் நேசம் குடிக்கவந்தேன்
உன்னிடம்...
********
உயிரைகலவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகலவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...
**********
கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...
********
மண்ணை அரித்துசெல்லும்
மழையும்,
என்னை
அரித்துசெல்லும்
நீயும் ஒன்றே...
********
கண்ணில் வந்தாய் கனவென
நினைத்தேன்...
கவிதையில் வந்தாய்
கற்பனையென நினைத்தேன்...
நெஞ்சில் வந்தாய் நினைவென
நினைத்தேன்...
நேரில் வந்தாய்
நிஜமென
திகைத்தேன்!!!
*********
பாவையின் பயணம்:-
தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க...
கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...
நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...
************
உடலை துண்டாக்கி
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை...
இப்படிக்கு,
ரோஜா.
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?
*********
பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..
*********
பாவையே!
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும்,
தாக்குதல் நடத்திய பார்வையால்
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும்
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும்,
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...
***********
மலரின் வாசம்
குடிக்கவந்த வண்டுகள் போலவே
மனதின் நேசம் குடிக்கவந்தேன்
உன்னிடம்...
********
உயிரைகலவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகலவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...
**********
கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...
********
மண்ணை அரித்துசெல்லும்
மழையும்,
என்னை
அரித்துசெல்லும்
நீயும் ஒன்றே...
********
கண்ணில் வந்தாய் கனவென
நினைத்தேன்...
கவிதையில் வந்தாய்
கற்பனையென நினைத்தேன்...
நெஞ்சில் வந்தாய் நினைவென
நினைத்தேன்...
நேரில் வந்தாய்
நிஜமென
திகைத்தேன்!!!
*********
பாவையின் பயணம்:-
தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க...
கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...
நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...
************
No comments:
Post a Comment