31 December 2013

கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும்

பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக, 
உடலை துண்டாக்கி 
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை... 
இப்படிக்கு, 
ரோஜா. 
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?

*********

பார்வைகளின் தரிசனத்தில் படரும் காதல் பல்லாண்டுகள் வாழ்வதில்லை...
உள்ளங்களின் தரிசனத்தில் உருவாகும் காதல் பல்லாண்டுகள் வாழாமல் சாவதில்லை..

*********

பாவையே! 
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும், 
தாக்குதல் நடத்திய பார்வையால் 
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும் 
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும், 
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...

***********

மலரின் வாசம் 
குடிக்கவந்த வண்டுகள் போலவே 
மனதின் நேசம் குடிக்கவந்தேன் 
உன்னிடம்...

********

உயிரைகலவாடும் மரணத்திடமிருந்தும் மீட்கலாம் என்னை...
ஆனால்
உள்ளத்தைகலவாடும் உன்னிடமிருந்து மீட்கமுடியாது என்னை...

**********

கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...

********

மண்ணை அரித்துசெல்லும் 
மழையும், 
என்னை 
அரித்துசெல்லும் 
நீயும் ஒன்றே...

********

கண்ணில் வந்தாய் கனவென 
நினைத்தேன்...

கவிதையில் வந்தாய்
கற்பனையென நினைத்தேன்...

நெஞ்சில் வந்தாய் நினைவென
நினைத்தேன்...

நேரில் வந்தாய்
நிஜமென
திகைத்தேன்!!!


*********

பாவையின் பயணம்:-

தரை இறங்க அரைநிலவும் நினைக்கும்
பெண்ணே! உன்னருகே பயணிக்க...

கூந்தல்ஈரம் குடிக்கும் காற்றும் துணையாகவர நினைக்கும்
பெண்ணே! உன்னோடு பயணிக்க...

நடுவானில் பூத்தநட்சத்திரமும் நடைபாதையில்
பூக்க நினைக்கும் பெண்ணே! உன்பாதத்தோடு
பயணிக்க...


************

No comments:

Post a Comment