31 December 2013

இதயவீடு திரும்பிசெல்கையில்

ஆயிரம் உறவுகள் ஊமையாக 
(உண்மையின்றி) வாழ்கின்றன 
என்னருகில்... 
நீ மட்டும் தான் உண்மைபேசும் 
உறவாக வாழ்கிறாய்
என்னுள்ளே...

********

கல்லில் கலப்படமானபின் சிற்பத்தை 
பிரித்தெடுக்க முடியாததை போல், 
உயிரில் கலப்படமானபின் உன்னையும் 
பிரித்தெடுக்க முடியாது....

*********

தூக்கம்:-

விழிமூடிகாத்திருந்தாலும் நீ விழிவசம் வந்தடைவதில்லை... 
நீ வரும்வேளையில் இருதயம் என்னிடம் இருப்பதாய் 
தெரிவதில்லை... 
நடப்பது,நடந்தது எல்லாம் மறந்து நடமாடுகிறேன்
உன்னாலே...
உடல்அசைவுகளை
நிறுத்தி உள்ளஅசைவில்
உயிர்வாழ வருகிறாய்...
உன்னுள்ளே பயணிக்க கனவுசாலை வைத்திருக்கிறாய்
என்னுள்ளே...
இதயம் ஈர்த்த அனைத்தும் இச்சாலையில் கிடைக்கும் கனவாக ஒருசில நொடிகளில் மட்டும்...
விழிகளுக்கு நிறமூட்டிய உன்னை விடியல் அழித்துவிடும்...


********

கண்களின் கற்பனையில் வாழ்வதே கனவுகள்... 

கற்பனையின் கண்களில் வாழ்வதே கவிதைகள்...

*********

மழை நின்றுபோனாலும் மழைதரும் இதம் 
உன் மனம்தரும் பெண்மழையே! உனதருகில் நின்றால்...

அனைவரின் அன்பு அணைந்துபோனாலும் உனது அருகாமை பெய்த அரைநொடி அன்புமழையின் நினைவுசாரலால் நனைகிறது என்ஆயுளடி...

**********

மழலையே! 
உன் 
மலர்பாதசுவடுகள் 
என்னில் என்று 
தோண்டினாலும் கிடைக்கும் 
ஏன் தெரியுமா?
என் மனதில்
புதைந்ததால்...


***********

மனதில் பெண்ணை வைத்து
விரலில்
பென்னை வைத்து
காகிதத்தையும் கற்பனையும் தேடினேன் கவிஞனாக...

காயங்களை
என்னுள் சேமித்து
கண்களிலே
கண்ணீரை சேமித்து சேமித்ததை செலவலிக்க
உன்னை தேடினேன்
தோழனாக...

நெருங்கும்போது
புரியாத நேசம்
பிரிந்தபிறகு
புரிகிறது என்னில்
புரியும்வேளையில் விழிநீர்மட்டம்
உயருகிறது கண்ணில்..

காதல் அதிகம் தரவேண்டிய ஊமைஉறவுகள்
கண்ணீர் அதிகம் தருகின்றன...

உண்மை அன்பை உலகமெங்கிலும் தேடி இதயவீடு திரும்பிசெல்கையில் என்னை தேடி மரணம் மனவாசலில் நிற்கிறது...


*********

அம்மாவின் மடி போல் ஓர் அலகிய உலகம் இதுவரை பிறக்கவில்லை....
நம்பிக்கையான உன் நட்பை போல் ஓர் உண்மையான உறவில்லை இதுவரை என்னிடம் ....
என் கல்லறையையும் காதலிக்கும் உன்னை போல் எவளையும் என்னவளாய் இதுவரை ஏற்கவில்லை....

No comments:

Post a Comment