31 December 2013

ஆயுளையும் கரைத்துபார்த்தேன்

ஆயுளையும் கரைத்துபார்த்தேன் ஆனால் உன்
அன்பு கரையவில்லை.. 
இதயத்தையும் இழந்துபார்த்தேன் 
ஆனால் உன் நினைவுகள் இறக்கவில்லை....

********

ஆண்டவன் செய்த
மரணஅறையில் 
வாழ்ந்ததைவிட
அன்பு செய்த உன்
மனஅறையில் 
வாழ்ந்ததே அதிகமடி....

*********

இரவு சொல்லிய கவிதை ............நிலவு
காலை சொல்லிய கவிதை........கதிரவன்
இமை சொல்லிய கவிதை...........கனவு
இதயம் சொல்லிய கவிதை...........காதல்
இதழ் சொல்லிய கவிதை.......புன்னகை
பிரிவு சொல்லிய கவிதை..........காயம்
காயம் சொல்லிய கவிதை.........கண்ணீர்
தனிமை சொல்லியகவிதை.........தவிப்பு
அம்மா சொல்லிய கவிதை.........அன்பு
நட்பு சொல்லிய கவிதை........நம்பிக்கை
விதை சொல்லிய கவிதை...........மரம்
பாதை சொல்லிய கவிதை...........பயணம்
தோல்விசொல்லிய கவிதை.........வெற்றி
முயற்சிசொல்லியகவிதை.......தன்னம்பிக்கை

முற்றுப்புள்ளி சொல்லிய கவிதை ..........முடிவு

*********

இமைகள் சொல்லி காதலிருத்திருந்தால், காலை கனவாக கலைந்திருப்பாய்...
இதயம் சொல்லி காதலித்ததால்,
மரணமில்லா நினைவாக நிற்கிறாய் ஜீவனுள்ளே...


*********

என்றோ
மரணத்தில் நழுவி விழவேண்டிய இதயம் ஏனோ,
இன்றே
உன் காதலில் விழுந்து மரணக்காயம் வாங்கவருகிறது பெண்ணே! உன்னிடம்...


*********

கல்வெட்டில் உறங்கும் கதைகளல்ல உன் கண்அசைவுகள்....

கல்லறையில் உறங்கும் நுரையீரலல்ல என்னுள் நுளையும் உன்
நினைவுகள்...


*********

உடலை உயிர்பிரியும்போது கலங்காத கண்கள்,
உன் உறவை உயிர்பிரியும்போது கதறிஅழும் உன்பிரிவினால்...


*********

உன் நிஜத்தின் தோளில்,
நிழலுக்கு அடைக்கலம் தருகிறாய்...

உன் கண்ணின் தோளில்,
கனவுக்கு அடைக்கலம் தருகிறாய்...

உன் அன்பின் தோளில், அடைக்கலம் தரமறுத்து தள்ளிவிடுகிறாயடி தவிப்புக்குள் என்னை...


*********

இமையின் கைகோர்த்து, கனவுகளில் உன்னை கடன்வாங்குகிறேன்....

இதயத்தின் கைவிரித்து,
காதலியாக உன்னை கடன்வாங்கினேன்....

நினைவின் கைபிடித்து, நீண்டஆயுளை உன்னிடம் கடன்வாங்குவேன்....


**********

எழுத்துகள்
பிழையானால்,
பொருள்
மறைந்துநிற்கும்....
அதைபோலவே,
எண்ணங்கள் பிழையானால், வானவில்வாழ்வே
மறைந்துநிற்குமடி....


*************

No comments:

Post a Comment