31 December 2013

வாழ்வின்சுவாசம்

ஊமைஇமைகள் உதடுகளாய் உணரப்பட்டது என்னவளின் இமைகள் என்னுடன் பேசுகையில்...

********

திசைபார்த்து எழுந்துவிழும் 
உன்னை வைத்தே உயிர்பெறுகிறது பொழுதுகள்...
உறைந்த பனிக்கட்டி உடைந்துருகும் உன் பார்வைபடுகையில்...
மிதக்கும் ஆழியோடு தூளிஆடும் ஆதவன் அழகில், 
மிதக்காத 
ஆழ்மனமில்லை...
அழுக்கெடுத்த ஆடைகளை உலர்த்திட காற்றின்கைகளைவிட
உன்கதிர்பார்வையே
போதுமானதே...
சுட்டெரிக்கும் சூரியனுக்கும் காதலியுண்டு மண்ணில்...
ஆகாயத்தின்மடியில் உறங்கிடும்போதே புரிந்தது அவள்தான் உன்
அன்னையென...
என்னைப்போல உனக்கும் உறவுகள் இல்லாமல் போனாலும் நம்மை படைத்த இறைவன் நமக்கு உறவுக்காரனானன் அதனால் தானோ உயிரில்லை
இறைவனுக்கும்...


**********

சுவாசிக்க காற்றுவாங்குவதைவிட கடினமாகிப்போனது 

நேசிக்க உறவுகள்வாங்குவது...

*********

பிரிவின் நீளம் குறைவென்றாலும், கடந்துசெல்பவனுக்கே காயங்கள் புரியும்

********

விழிகளுக்கு 
பாதைதந்த 
பார்வை 
பிரிந்துபோனால், இருட்டின்பிடியில் இருவிழி வாழும்:-):-):-)
உள்ளத்துக்கு
நேசம்தந்த
உறவுகள்
பிரிந்துபோனால்,
நினைவின்பிடியில் நெஞ்சம் வாழும்:-):-):-).


*********

உடலுடன்பிறந்த
உயிர்
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் கல்லறைக்குள் அடங்கிவிடும்:-):-):-)
பிரியமுடன்பிறந்த 
நீ
பிரியும்வேளையில்,
வாழ்வின்சுவாசம் நினைவின்அறைக்குள் நீண்டுவிடும்:-):-):-)


************

No comments:

Post a Comment