31 December 2013

விழித்திரையில் பிறந்து

நிலவின்கவிதையில்
நீச்சலாடும் இரவில் பறவைகள்கூட பறப்பதில்லை 
"இதயம்" மட்டும் ஏன் பறக்கிறதோ 
என்னவளைத்தேடி...

*********

அன்னை இல்லாமல் போனால் அன்பை மறப்போம்
தேவைகள் இல்லாமல் போனால் தேடலை மறப்போம்
உண்மை இல்லாமல் போனால் உறவுகளை மறப்போம்
கண்கள் இல்லாமல் போனால் கனவுகளை மறப்போம்
வண்ணம் இல்லாமல்
போனால் வானவில்லை
மறப்போம்
வாசங்கள் இல்லாமல் போனால் நேசங்களை மறப்போம்
காதல் இல்லாமல் போனால் காயங்களை மறப்போம்
காயங்கள் இல்லாமல் போனால் கடவுளை மறப்போம்
இதயம் இல்லாமல் போனால் இவைஅனைத்தையும் மறப்போம்



*******

பிரிய நினைக்கும் நீ என்னை புரிய
நினைக்கலாமோ?

எழுதிவிட்டுஅழிப்பதால் என் நெஞ்சம் எழுத்துபலகைஆகிடுமோ?

உன் இமையின் இடர்பாடுகளில் சிக்கியதால் என்இதயம் இறந்துவிடுமோ?

பெண்பார்வைஎரியாமல் போனால் ஆயுளும்
அணைந்துபோகுமோ?

பிரிவின் தூரத்தால் என்னைகடந்து பயணிப்பாயோ?

உன்னை இழந்தால் இலைபோலான இதயம் சருகாகுமோ?

உன்னைபருகியதன் பயனாய் நான்உருகிவிடுவேனோ?

உன்னிடத்தில்கொடுத்த
உள்ளத்தை திரும்பபெறமுடியுமோ?

உன்னில் மிதந்த என்னை என்னால் பிரித்தெடுக்கமுடியுமோ?

நீ இல்லாமல் என்னுலகம் இயக்கம்பெறுமோ?

மரணம் வருவதற்குள் மனம் உன்னை மறந்துவிடமுடியுமோ?

கல்லறை நுழைவதற்குள் காதல் தொலைந்துபோகுமோ?

எரிக்கும் உன் நினைவுகளை எரிக்கமுடியுமோ?

உள்ளம் ஊமையானபிறகும் இவைகளை விவரிக்க வருவாயா? விரைவில்...


***********

கைகள் இல்லாத உன்
கண்கள் தீண்டுதலை
போல
கால்கள் இல்லாத உன் கவிதையும் தீண்டுகிறது
என்னை....


*********

மழலையே!
விழித்திரையில் பிறந்து மனதிரையில் நடந்து
உயிர்திரையில் ஓடுகிறாய்


*********

No comments:

Post a Comment