31 December 2013

பெண்"மை"

அவளது 
கற்பனையில் கட்டினால், 
கவிதையின் 
ஆயுளும் அதிகமாகிறது....

*********

இதழைவிட 
"இருமடங்கு" 
இதயம் பேசுகிறது அருகில்வசிக்கும் அவளிடம்...

*********

நடனமிடும் கவிதைகளே அவளது இமைகள்
மூச்சுவிடும் கவிதைகளே
அவளது இதயத்துடிப்புகள்
தவழும் கவிதைகளே அவளது புன்னகைகள்
ஈரமான கவிதைகளே அவளது கண்ணீர்த்துளிகள்
தூங்காத கவிதைகளே
அவளது நினைவுகள்...
எனக்காகவே உயிர்வாழ்ந்திடும் கவிதையே
அவள் தான்...
கவிதைக்காகவே உயிர்வாழ்ந்திடும்
தமிழும் நானே 


********

வெற்றிடத்தாளை கண்டதும் எழுத்தால் கரைய நினைக்கும்
பேனா"மை"...
காயங்களை
கண்டதும் கண்ணீரால் கரைய நினைக்கும்
கண்"மை"...
இவைகளை போலல்லாமல்
கரையாத மையாய்

இருக்குமென நினைக்கதவறினேன் அழகியஆணே!
உன் நினைவை
கண்டதால்...


**********

அதிகமாக நேசித்ததற்கு ஆதாரமாய்
காயங்களும்,
ஆழமான காயத்திற்கு ஆதாரமாய்
கண்ணீரும்,
நேசிக்காத நீ தருவது சுலபம்
நேசித்த நான் கடந்துவருவதுதான் கடினம்:-(:-(:-(


********

துடித்திட இமைகளுக்கு தெரியுமென்பதால்,
`இமை'
இதயமாக வாழ முடியாததைப்போலவே
தழுவிட கடலலைக்கு தெரியுமென்பதால்,
`கடல்'
காதலனாக
வாழமுடியாது:-):-):-)


********

தூவலெடுக்காமல்
என் விரல்கள்
தூங்கப்போனாலும், 
ஆணே!
உன் அழகியவிழிகள் அமைதிபெற
விடுவதில்லை...


********

மற்றவர்களை காயமாக்கிடுவதற்குள்,
நகங்களை துண்டிப்பதைப்போலவே
வார்த்தைகளையும் துண்டித்துவிட்டால் வார்த்தைகளின் சொந்தங்களுக்கு
துன்பமே இல்லை :-):-):-)


No comments:

Post a Comment