உன்னை எழுத தமிழிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால்
வரலாறில் வருவேனோ...
*********
ஓரெழுத்து கவிதையாக
"நீ" இருந்தால்,
ஈரெழுத்து கவிதையாக
"நான்" இருப்பேன்.....
*******
கடலில் விழுந்த
மழையை
மீட்பது போல்,
காதலில் தவறிவிழுந்த
மனதையும்
மீட்பது இயலாத
நிகழ்வோ...
********
திறமை என்பது மறைந்துவாழும் மனது போல்
எல்லோரிடமும் உண்டு
உணர்ந்தவரிடத்தில் உயிர்வாழும்(துடிக்கும்) உணராதவரிடத்தில் உயிர்விடும்(துடிப்பதுபோல் நடிக்கும்)....
*********
பிரிவின்
பொருளும்,வலியும் புரிந்ததால் தான்,
உன்னை புரிந்துகொள்ள வழி கிடைத்தது
நீ இல்லாமல் நீந்தும்
உன் நினைவின் பயணத்தில்....
*********
இதயம் தூக்கம்கொள்ளாமல் துடிப்பது உயிர்வாழ என நினைத்திருந்தேன்
இத்தனை நாட்களாய்
இன்றுதான் தெளிந்தது என்னுள் வாழும் உன்னுடன் வாழ்வதற்காகென.....
*********
எழுத்துகள் எழுந்து நடக்காமல் ஊனமாகின்றன
என்னிடம் நீ
மெளனமாவதால்....
வார்த்தைகள் வயதாகமால் வாழ்கின்றன
என்னிடம் நீ கவிதையாவதால்....
********
உன் நினைவுகளை இழக்காதவரை,
என் இதயம் இறக்காது....
********
ஆசைகளுக்கு கரங்கள் செய்தால்,
விண்ணில் நிற்கும் நிலவும் விரைவில்
விரலில் நிற்கும்....
ஆசைகளுக்கு உயிர் செய்தால்,
உடல்இல்லாததற்கும் உயிர்முளைக்கும்....
********
உன்னை நானும்
என்னை நீயும்
புரிந்துகொண்டால்,
பிரிவின் நிழல்கூட
நம் பின்னால் வராது....
*********
இரவின் இருளில்
புகழ் தேடுபவளே...
பார்வை பாய்ந்தால்
முகம் மறைப்பவளே...
உடல் இல்லாமலே
உள்ளம் திருடுபவளே...
நடைபயிலும் நாட்களில்
விண்ணில் நழுவி மண்ணில் விழாதவளே...
கவிஞனின் கண்ணில் விழுந்தெழுந்தாய் கைவிரல்கவிதையாக... வயதுகள் சொல்லாமல் வாழ்கிறாய் வானிலே...
என்னை திருடிய
இயற்கையின் இருப்பிடத்தில்
உனக்கே முதலிடம் ....
***********
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால்
வரலாறில் வருவேனோ...
*********
ஓரெழுத்து கவிதையாக
"நீ" இருந்தால்,
ஈரெழுத்து கவிதையாக
"நான்" இருப்பேன்.....
*******
கடலில் விழுந்த
மழையை
மீட்பது போல்,
காதலில் தவறிவிழுந்த
மனதையும்
மீட்பது இயலாத
நிகழ்வோ...
********
திறமை என்பது மறைந்துவாழும் மனது போல்
எல்லோரிடமும் உண்டு
உணர்ந்தவரிடத்தில் உயிர்வாழும்(துடிக்கும்) உணராதவரிடத்தில் உயிர்விடும்(துடிப்பதுபோல் நடிக்கும்)....
*********
பிரிவின்
பொருளும்,வலியும் புரிந்ததால் தான்,
உன்னை புரிந்துகொள்ள வழி கிடைத்தது
நீ இல்லாமல் நீந்தும்
உன் நினைவின் பயணத்தில்....
*********
இதயம் தூக்கம்கொள்ளாமல் துடிப்பது உயிர்வாழ என நினைத்திருந்தேன்
இத்தனை நாட்களாய்
இன்றுதான் தெளிந்தது என்னுள் வாழும் உன்னுடன் வாழ்வதற்காகென.....
*********
எழுத்துகள் எழுந்து நடக்காமல் ஊனமாகின்றன
என்னிடம் நீ
மெளனமாவதால்....
வார்த்தைகள் வயதாகமால் வாழ்கின்றன
என்னிடம் நீ கவிதையாவதால்....
********
உன் நினைவுகளை இழக்காதவரை,
என் இதயம் இறக்காது....
********
ஆசைகளுக்கு கரங்கள் செய்தால்,
விண்ணில் நிற்கும் நிலவும் விரைவில்
விரலில் நிற்கும்....
ஆசைகளுக்கு உயிர் செய்தால்,
உடல்இல்லாததற்கும் உயிர்முளைக்கும்....
********
உன்னை நானும்
என்னை நீயும்
புரிந்துகொண்டால்,
பிரிவின் நிழல்கூட
நம் பின்னால் வராது....
*********
இரவின் இருளில்
புகழ் தேடுபவளே...
பார்வை பாய்ந்தால்
முகம் மறைப்பவளே...
உடல் இல்லாமலே
உள்ளம் திருடுபவளே...
நடைபயிலும் நாட்களில்
விண்ணில் நழுவி மண்ணில் விழாதவளே...
கவிஞனின் கண்ணில் விழுந்தெழுந்தாய் கைவிரல்கவிதையாக... வயதுகள் சொல்லாமல் வாழ்கிறாய் வானிலே...
என்னை திருடிய
இயற்கையின் இருப்பிடத்தில்
உனக்கே முதலிடம் ....
***********
No comments:
Post a Comment