31 December 2013

இதயத்தால் படித்து

காலைவானில் காணமால்போகாமலிருக்க ஆகாயநிலவிற்கு
ஆக்ஸிஜன் அனுப்பி உயிர்அளித்தேன்...

உயிர்பூத்த நிலவாலும் உள்ளத்தில்பூத்த உன்னாலும்
அகிலமும் அகமும் அழகானதடி...

இரத்தநாளங்களில்
கவிதைகளாய் வழிந்து நரம்பில் நடனமாடி இறுதியில் இதயம் சேர்ந்தாயடி...

தூங்கா துடிப்பாகி உன்ஆழ்மனதுள் ஆயுள்கரைப்பேனடி...

விழிகளை விடியல்உரசும்வரை உணரவில்லை
கண்ணோடு
வாழ்ந்தது கனவென...

கனவுகலைந்த பிறகு புரிந்தது வாழ்ந்தது பெண்ணே!
உன் நினைவென...


********

உன் தேவைக்காக சுழலும் மின்விசிறியல்ல
என் இதயம்,
நீ நினைக்கும் நேரங்களில்
அனுபவித்து
அணைத்துசெல்ல...


*********

சுவாசித்தவரின் சுவாசபாதையில் சுற்றிதெரியும்
மலரின் வாசம்
போல
நேசித்தவரின்
நெஞ்சில்
நெருக்கமாகிறது
மனதின் வாசம்...


*********

உன் வருகையால் என்னுள் தென்பட்டஅறிகுறிகளை தேடி ஆராய்வதற்குள் தொலைத்துவிட்டேன் இதயதுடிப்புகளை
"உன்னிடம்"
உயிரிடம் காரணம் கேட்டால் காதலென கதை சொல்கிறது
"என்னிடம்"....


***********

விழிகள் போல எனக்கு
இதயமும் இரண்டடி இருப்பிடத்தின் இடைவெளிமட்டும் அதிகமடி
ஒன்று என்னிடம் மற்றொன்று உன்னிடம்....


***********

இதழ்களால் படித்து இதயத்தில் பதியும் காகிதகவிதையல்ல நான்,
இதயத்தால் படித்து
இருவிழியில் பதியும் பெண்கவிதை...


**********

ஊஞ்சலாடும் பார்வைகள் ஏனோ உனைகண்டதும் ஊனமானதோ...

கதை பேசும் விழிகள் ஏனோ உனைகண்டதும் கவிதைபேசுதோ...

ஊமை விழிகள் 
ஏனோ உனைகண்டதும்
உரையாடுகிறதோ...

இரவின் இருளில் உறங்கிய இருவிழிகள் ஏனோ
உனைகண்டதும் உறக்கத்தை தொலைத்ததோ...

உருவம் வாங்கி உயிர்வாழ்ந்த விழி ஏனோ
உனைவாங்கியதும்
உறைந்துபோனதோ...


*********

உனக்காக "நான்"
வாழலாம்...
எனக்காக "நீ"
வாழலாம்...
நமக்காக வாழ்வது
நம் "இதயம்" ஒன்றே...


***********

No comments:

Post a Comment