31 December 2013

கண்ணம்அருந்தும் கண்ணீருக்கு

பிரிவென்பது 
உன்னால் 
தரப்படும்வரை வலிக்கவுமில்லை
இனிக்கவுமில்லை:-):-):-).

********

உடலுக்குள் துடித்திடும் 
"உயிர்"
போல 
எனக்குள் துடிக்கிறாய் 
"நீ"....

********

எதற்கும் விலைபோகாமல் இருப்பதாலும்,
உடல் தூரம்சென்றாலும் உள்ளங்கள் சங்கமிப்பதாலும்,
எச்சூழ்நிலையிலும் எடைகுறையாமல் இருப்பதாலுமே
முழுமைபெறுகிறது உண்மையான அன்பு...

**********

மூடிய ஜன்னலின்வழி முகம் காட்டும் பௌர்ணமிநிலவை 
போலவே
உறவுமுறிந்தபிறகும் முகம் காட்டுகிறது உன் பசுமையானநினைவுகள்...

**********

மறுசுழற்சியில் 
பிறந்திடும் காகிதமல்ல காதல்...
ஒற்றைசுழற்சியில் வாழ்ந்திடும் உயிர்கள் உணர்ந்திடும் உணர்வே
காதல்...

***********

இருவிழிகளின் தேடல், விரும்பிய முகமே..
இதயத்தின் தேடல், உண்மையான உறவுகளே..
இருவிழிகளின் தேடல் முடிவுற்றாலும் இதயத்தின் தேடல் முடிவிலியாகிறது 
சிலரது வாழ்வில்..

************

வான்தோட்டத்தில் பூத்திடும் நட்சத்திரத்தின் அளவையும்,
மனதோட்டத்தில் 
பூத்திடும் நம்பிக்கையின் அளவையும், 
"குறிப்பிட"முடிவதில்லை பூமியென்னும்தோட்டத்தில் பூத்த எவராலும்....

**********

கண்ணம்அருந்தும் கண்ணீருக்கு மரணம்தந்து ஆறுதல்மருந்தளித்து மனதருகில்இருந்தவர்களே சில நேரங்களில்,
துன்பங்களை தூவி 
ஆறாத காயங்களை அன்பளிப்பாக்கிவிட்டு தூரம்செல்வதுண்டு....

No comments:

Post a Comment