கவிதைகளை படைத்திட
"கருவறை" தேவைப்படுவதில்லையென நெஞ்சம் எண்ணியது தவறாகிப்போனதுஎன்னைப் படைத்த அன்னையை எண்ணியவேளையில்...
*********
நான்கிமைகளின் நடனாலயம் -
"இருவிழிகள்"
அன்பானவர்களின்
சரணாலயம் -
"இதயம்"
"இருவிழிகள்"
அன்பானவர்களின்
சரணாலயம் -
"இதயம்"
*********
தவழும்நேரத்தில் அன்னை
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத
கணம் கொடியதாகிடும்...
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத
கணம் கொடியதாகிடும்...
*******
அன்பானவர்களை அடையாளம்காட்டிடும், "துன்பமும்"
அழகானதே என்பார்வையில்....
அழகானதே என்பார்வையில்....
********
உயிரில் உதித்தவர்களே உதைக்கும்போதுதான் பிறந்திடுகிறது காயங்களின் குழந்தையாக "கண்ணீர்"...
********
உடலோடு பொருந்திய உயிரைவிட,
உள்ளத்தோடு பொருந்திய
உன் நினைவுகள் ரசிக்கத்தக்கவை...
உள்ளத்தோடு பொருந்திய
உன் நினைவுகள் ரசிக்கத்தக்கவை...
******
அதீத அன்பை
நேசித்தவர்மீது
வைத்தால்,
நேசித்தநெஞ்சம்
பலமுறைகள்
மரணவலி காணவேண்டியிருக்கும்...
நேசித்தவர்மீது
வைத்தால்,
நேசித்தநெஞ்சம்
பலமுறைகள்
மரணவலி காணவேண்டியிருக்கும்...
**********
நினைவின்மழையில்
நனைந்திடும் நொடியில்,
"என்னவன் என்னில் மின்னுவது"
இதயம் இதுவரை ரசிக்கமறந்த அழகில் ஒன்றானது...
நனைந்திடும் நொடியில்,
"என்னவன் என்னில் மின்னுவது"
இதயம் இதுவரை ரசிக்கமறந்த அழகில் ஒன்றானது...
**********
உடல்முழுதும் பாயும் உதிரத்தால்
உயிர்வாழ்ந்த "உள்ளம்" ஏனின்று
உன்னால் உயிர்வாழநினைக்கிறதோ?
காதலின் செயல்பாட்டில் சிக்கினால் கடவுளுக்கும் என் நிலைமை தான்
உயிர்வாழ்ந்த "உள்ளம்" ஏனின்று
உன்னால் உயிர்வாழநினைக்கிறதோ?
காதலின் செயல்பாட்டில் சிக்கினால் கடவுளுக்கும் என் நிலைமை தான்
**********
No comments:
Post a Comment