31 December 2013

உயிரில் உதித்தவர்களே

என்று நினைத்தாலும் இனிப்பது
இதயத்திற்கு இன்பம்சொல்லிதந்த
உன் நட்பே...
********
தோல்வி காணாமல் என்னை காப்பாற்றவே என்காதல் ஒருதலையானது......
*********
 கவிதைகளை படைத்திட 
"கருவறை" தேவைப்படுவதில்லையென நெஞ்சம் எண்ணியது தவறாகிப்போனது 
என்னைப் படைத்த அன்னையை எண்ணியவேளையில்...

*********

நான்கிமைகளின் நடனாலயம் - 
"இருவிழிகள்"

அன்பானவர்களின் 
சரணாலயம் - 
"இதயம்" 

*********
தவழும்நேரத்தில் அன்னை 
இல்லாததைவிட, துவளும்நேரத்தில் அன்னையாக யாரும் இல்லாத 
கணம் கொடியதாகிடும்...

*******

அன்பானவர்களை அடையாளம்காட்டிடும், "துன்பமும்" 
அழகானதே என்பார்வையில்....

********

உயிரில் உதித்தவர்களே உதைக்கும்போதுதான் பிறந்திடுகிறது காயங்களின் குழந்தையாக "கண்ணீர்"...

********

உடலோடு பொருந்திய உயிரைவிட,
உள்ளத்தோடு பொருந்திய 
உன் நினைவுகள் ரசிக்கத்தக்கவை...

******

அதீத அன்பை
நேசித்தவர்மீது 
வைத்தால்,
நேசித்தநெஞ்சம்
பலமுறைகள்
மரணவலி காணவேண்டியிருக்கும்...

**********

நினைவின்மழையில்
நனைந்திடும் நொடியில், 
"என்னவன் என்னில் மின்னுவது" 
இதயம் இதுவரை ரசிக்கமறந்த அழகில் ஒன்றானது...

**********

உடல்முழுதும் பாயும் உதிரத்தால் 
உயிர்வாழ்ந்த "உள்ளம்" ஏனின்று
உன்னால் உயிர்வாழநினைக்கிறதோ?
காதலின் செயல்பாட்டில் சிக்கினால் கடவுளுக்கும் என் நிலைமை தான் 

**********
 

No comments:

Post a Comment