13 November 2013

அழகாய் வாழ்வோமே

வனவாசத்தில் இராமன் வாழ்ந்த ஆண்டுகளை தாண்டியது நாம் கல்விகூடத்தில் கல்விபயிலவந்த ஆண்டுகள்..............
கல்விதகுதி வாங்கிதராத வேலையை,
மற்றவர்களின் அனுபவவாசத்தால் வாங்கிகொண்டு வீடு திரும்புகிறோம் இது இன்றைய பட்டதாரிகளின் வாழ்க்கை..........
மனிதர்களை சார்ந்துவாழும் நரகவாசியாக வாழ்வதைவிட,
மரங்களை
சார்ந்துவாழும் வனவாழ்க்கையே மேலானது............
************
ஆயிரக்கணக்கான இன்பங்களை தாங்கும் இதயம்
ஒற்றை துன்பத்தால் தூங்குவதில்லை.......
காரணம்,
கனமில்லா உள்ளமில்லை கனமான வலிகள்.....
***********
பலநாட்களாக சேர்த்த நற்பெயரை
ஒருநொடியில் செய்த தூயமில்லாசெயல் சிதறடித்துவிடும்........
நொடிபொழுதுகூட உன்நிலையில் இருந்து தவறிவிடாதே
தவறினால், சேகரித்தஎதுவும் நம்வசம் வாழ்வதில்லை..
************
பழகியபின் விலகிநின்றுபார் உயிர்பையில் நீ
தந்துபோன தவிப்பால், கண்இமைகள் கண்ணீரில் நீராடிநிற்கின்றன
வலித்தாலும் இனிக்கும் தருணமது........
************
நாவிடம் துன்பம்தரும் வார்த்தைகள் தூங்கிவிட்டால், யார்மனதிலும் துக்கம் எழுவதில்லை.....
***********
சிந்தும் கண்ணீர் சீக்கிரம் கண்களைவிட்டு மறைந்துவிடும்
ஆனால்
கண்ணீருக்கான காரணம் என்றும் மனதைவிட்டு
மறைவதில்லை....
*********
கோபங்களை இதயத்தில் தேக்கிவைத்தால், இதயத்தையும்
பாதிக்கும்
இதயத்தில் இருப்பவரையும்
பாதிக்கும்...
**********
இதயம் இருப்பது தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன் இத்தனை நாட்களாக,
நீ தங்கிய பிறகு உணர்கிறேன் துடிக்கும் இதயத்தை .....
உறங்கிய இதயம் தூக்கம்கலைத்தது உன்வருகையால்..
*********
தோல்வியை சூடியவன் விடாமுயற்சியோடு வெற்றிக்கான பாதையை தேடுவான் இது தோல்வியில் பயின்றது....
வெற்றிவாகை சூடியவன் அடுத்தநிலை தேடாமல் கிடைத்தவெற்றியோடு அடைபட்டுவிடுவான் இது வெற்றியில் பயின்றது....
**********
வாழ்வது ஒருநாளானாலும் ஈசல்
இன்பம்காணாமல் இறப்பதில்லையே.........
மரணம்வரும் நேரம் தெரியாத நாமும் மீதிஇருக்கும் ஆயுளையாவது அழகாய் வாழ்வோமே....
--------------------
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment