வனவாசத்தில் இராமன் வாழ்ந்த ஆண்டுகளை தாண்டியது நாம் கல்விகூடத்தில் கல்விபயிலவந்த ஆண்டுகள்..............
கல்விதகுதி வாங்கிதராத வேலையை,
மற்றவர்களின் அனுபவவாசத்தால் வாங்கிகொண்டு வீடு திரும்புகிறோம் இது இன்றைய பட்டதாரிகளின் வாழ்க்கை..........
மனிதர்களை சார்ந்துவாழும் நரகவாசியாக வாழ்வதைவிட,
மரங்களை
சார்ந்துவாழும் வனவாழ்க்கையே மேலானது............
************
ஆயிரக்கணக்கான இன்பங்களை தாங்கும் இதயம்
ஒற்றை துன்பத்தால் தூங்குவதில்லை.......
காரணம்,
கனமில்லா உள்ளமில்லை கனமான வலிகள்.....
***********
பலநாட்களாக சேர்த்த நற்பெயரை
ஒருநொடியில் செய்த தூயமில்லாசெயல் சிதறடித்துவிடும்........
நொடிபொழுதுகூட உன்நிலையில் இருந்து தவறிவிடாதே
தவறினால், சேகரித்தஎதுவும் நம்வசம் வாழ்வதில்லை..
************
பழகியபின் விலகிநின்றுபார் உயிர்பையில் நீ
தந்துபோன தவிப்பால், கண்இமைகள் கண்ணீரில் நீராடிநிற்கின்றன
வலித்தாலும் இனிக்கும் தருணமது........
************
நாவிடம் துன்பம்தரும் வார்த்தைகள் தூங்கிவிட்டால், யார்மனதிலும் துக்கம் எழுவதில்லை.....
***********
சிந்தும் கண்ணீர் சீக்கிரம் கண்களைவிட்டு மறைந்துவிடும்
ஆனால்
கண்ணீருக்கான காரணம் என்றும் மனதைவிட்டு
மறைவதில்லை....
*********
கோபங்களை இதயத்தில் தேக்கிவைத்தால், இதயத்தையும்
பாதிக்கும்
இதயத்தில் இருப்பவரையும்
பாதிக்கும்...
**********
இதயம் இருப்பது தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன் இத்தனை நாட்களாக,
நீ தங்கிய பிறகு உணர்கிறேன் துடிக்கும் இதயத்தை .....
உறங்கிய இதயம் தூக்கம்கலைத்தது உன்வருகையால்..
*********
தோல்வியை சூடியவன் விடாமுயற்சியோடு வெற்றிக்கான பாதையை தேடுவான் இது தோல்வியில் பயின்றது....
வெற்றிவாகை சூடியவன் அடுத்தநிலை தேடாமல் கிடைத்தவெற்றியோடு அடைபட்டுவிடுவான் இது வெற்றியில் பயின்றது....
**********
வாழ்வது ஒருநாளானாலும் ஈசல்
இன்பம்காணாமல் இறப்பதில்லையே.........
மரணம்வரும் நேரம் தெரியாத நாமும் மீதிஇருக்கும் ஆயுளையாவது அழகாய் வாழ்வோமே....
--------------------
No comments:
Post a Comment