எழுத்துகள்
பிழையானால்,
பொருள்
மறைந்துநிற்கும்....
அதைபோலவே,
எண்ணங்கள் பிழையானால், வானவில்வாழ்வே
மறைந்துநிற்குமடி....
*********************
கருவறையில் உதைத்தேன் சினம்கொள்ளமால் சிரித்தாள்...
கருவறையைவிட்டு இறங்கும்வரை
இரத்தத்தை இரையாக்கினாள்...
உறுப்புகள் உருவாகும்வரை இடம்கொடுத்தாள் கருவறையில்....
நடமாடும்வரை இடம்கொடுத்தாள் இடையில்....
மரணம்வரை
இடம்கொடுத்தாள்
மனதில்....
உன் உறக்கத்தை உறிஞ்சி உயிர்வாழ்ந்த என்னை
இதுவரை
உன்னை மிஞ்சி யாரும் நேசிக்கவில்லை....
*******************
விலகிநின்று
விரும்பு...
விரும்பியபின்
விலகாதே...
********************
விளக்கின் மதிப்பு
வெளிச்சம் விலகையில் தெரியும்....
உள்ளத்தின் மதிப்பு
உயிர் விலகையில்
தெரியும்...
அன்பின் மதிப்பு
அருகாமை விலகையில் தெரியும்....
***************
உன் கருவிழி
ஓரப்பார்வை தூவிபோகையில், கவிதைவரும் காகிதத்தோடு....
உன் கருவிழி
பாராமல்போகையில், கண்ணீர் வரும் கண்ணங்களோடு....
*************
அடித்துவிரட்டினாலும் அருகாமையை திருடும் சிலரது நினைவுகள்....
துரத்திபோனாலும்
தூரம் போகும்
சிலரது நினைவுகள்....
கண்ணீராய் வரும்
சிலரது நினைவுகள்....
கனவாய் வரும்
சிலரது நினைவுகள்....
உயிர்வாழ
உணவாய் வரும்
சிலரது நினைவுகள்....
No comments:
Post a Comment