13 November 2013

இதயம் உறங்கினால்

ஏற்றிவிடவந்த ஏணியில், பார்வைபதித்தவன் கீழே
பாதம்பதித்தவன் மேலே...
செயல்படுபவன் வாழ்வில் உயரம் காண்பான்...
செயல்படாதவன் வாழ்வில் ஆழம் காண்பான்...
*************
தொலைதொடர்பு:-
தொடர்பில் இருக்கும்போது உணராத உன்அன்பை
நீ தொலைந்தபிறகு தேடுகிறேன்....
************
நொடிகளை கடந்தால்தான் நிமிடங்கள்....
அடிகளை கடந்தால்தான்
வாழ்க்கை....
**************
இமைகள் உறங்கினால் உறக்கம்....
இதழ்கள் உறங்கினால் மௌனம்....
இதயம் உறங்கினால் மரணம்....
***********
கருவறையும் கண்ணீரும் காணாத
மனிதனே இல்லை....
இதயமும் இன்பமும் சுமக்காத
ஜீவனே இல்லை....
*************
பாயும் தென்றலுக்கு
பாதை
தெரிவதில்லை...
தோள்சாயும் நிலவுக்கு வாசல்வழிவர
தெரிவதில்லை...
மௌனம்தூக்கும் மலரிதழுக்கு பேச தெரிவதில்லை...
உன்னை நேசித்த எனக்கு உன்னைத்தவிர வேறொன்றை யோசிக்க தெரிவதில்லை...
**************
எழுதுகோலை எடுக்காமல் எண்ணற்ற கவிதையை, எனக்காக எழுத உன் கருவிழியாலே முடியும்....
**************
துடிக்கும் நூலகமென
உன் கண்இமையை
படிக்கும்போது உணர்ந்தேன்....
**************
காற்றே!
உன் பாதம் பட்டால்,
கன்னியின் கருங்கூந்தலும் கவிதைஎழுத
ஆரம்பித்துவிடும்
என் கண்ணிடம்....
*************
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment