13 November 2013

உன் நினைவின் சாரல்

இமையிடம் வரும் கனவிடம்
நீ
நிழலாக வாழலாம்...
இதயத்திடம் வரும் நினைவிடம்
நீ
நிஜமாக வாழ்கிறாய்....
************
கற்பனையிடம் நான் வாங்கிய
கவிதைகளைவிட,
உன் கண்களிடம்
வாங்கிய கவிதைகள் அதிகமடி.....
***************
வாசமில்லா மலரும்
நேசமில்லா உறவும் கவரப்படுவதில்லை எவராலயும்...
**************
காற்றை எதிர்த்து மலரமுடியுமா மலர்...
காதலை எதிர்த்து வாழமுடியுமா மனிதன்...
*************
பேனாமுனையிடம்
கசியும் கவிஞனின் கற்பனைகவிதையெல்லாம் பெண்ணே! உன்
கண்இமையிடம்
கசியும்
பார்வைகவிதைக்கு
பதில் சொல்லமுடியுமா....
**************** 
பூங்காற்றின் கைகள்
தட்டிஎழுப்பும் வரை எழுவதில்லை
மரணம் வரை மெளனத்தோடு
மலரும் மலர்கள்.....
கதிரவனின் கால்கள் மேற்கை
கடக்கும் வரை பிறப்பதில்லை பிள்ளைநிலா...
***************
அலைகள்
படாமல் கடற்கரை
வாழலாம்......
உன் நினைவலைகள் படாமல்
என் கல்லறைகூட வாழ்வதில்லையடி....
************
வாடைகாற்று வருந்திநிற்கும்
உன் வாசனையை வாங்காமல்
ஓடியதற்காக...
வாசமான மலர் வாடிநிற்கும்
உன் வாசனையை வாங்காமல்
வாழ்ந்ததற்காக....
*************
நிலவொளி இல்லாத வானமும்,
நீ இல்லாத
வாழ்வும் ஒன்றே.....
**************
பெண்ணே!
உன் நினைவின் சாரல்
என்மீது சாய்ந்து கொண்டே பயணிக்கும் நிஜம் மீது
சாயும் நிழல் போலவே....
**************** 

 
 
 
 
 
 

No comments:

Post a Comment