13 November 2013

ஒலியில்லா வார்த்தை

கட்டுப்படாத
காற்றை கட்டிவைக்கநினைப்பதும், நேசிக்கவிரும்பாத உன்னை
நெருங்கநினைப்பதும் முடியாத ஒன்றே...
************
இதழில்லாமல்
முத்தமிடும்
காலில்லாமல்
நடனமிடும்
உருவமில்லாமல் உயிர்தொடும்
உயிரில்லா
காதலனவன் .....
*****************
இமைகள் கட்டிதழுவும்வரை கனவுகள்
ஒட்டிகொள்ளும் இரவுகளோடு....
****************
அளவினை ஏற்காதது அன்பு மட்டுமே...
இனத்தை பாராமல்
இதயம் பார்வையிடுவதும் அன்பு மட்டுமே...
***************
கண்ணீரால்
காயங்களை கரைக்கமுடிவதில்லை...
புன்னகையால்
காயங்களை
புதைக்கமுடிவதில்லை...
இமைசிந்தும்
கண்ணீரையும்,
இதழ்சிந்தும்
புன்னகையும்
மறைக்கமுடிவதுமில்லை...
****************
தன்னம்பிக்கை தடுமாறாதவரை
தடைகளை
தாண்டலாம்....
*************
பிம்பம் காட்ட பிறந்தது கண்ணாடி
நம்பிக்கை ஊட்ட பிறந்தது
நம்வாழ்க்கை ....
**************
வார்த்தையின் நீளம் சுருங்கும்போது
மௌனத்தின் நீளம் விரியும்....
**************
இதழ்தழும்பும் வார்த்தைகளெல்லாம் இனிப்பதில்லை
உன் இமையில்
நீந்தும் ஒலியில்லா வார்த்தைபோல்....
**************
விடியலின்
பார்வைக்காக
இரவு ஏங்குவதை
போல
இருவிழியின் பார்வைக்காக
இதயம் ஏங்குகிறது....
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment