என்றோ
மரணத்தில் நழுவி விழவேண்டிய இதயம் ஏனோ,
இன்றே
உன் காதலில் விழுந்து மரணக்காயம் வாங்கவருகிறது பெண்ணே! உன்னிடம்...
கல்வெட்டில் உறங்கும் கதைகளல்ல உன் கண்அசைவுகள்....
கல்லறையில் உறங்கும் நுரையீரலல்ல என்னுள் நுளையும் உன்
நினைவுகள்..
உடலை உயிர்பிரியும்போது கலங்காத கண்கள்,
உன் உறவை உயிர்பிரியும்போது கதறிஅழும் உன்பிரிவினால்...
உன் நிஜத்தின் தோளில்,
நிழலுக்கு அடைக்கலம் தருகிறாய்...
உன் கண்ணின் தோளில்,
கனவுக்கு அடைக்கலம் தருகிறாய்...
உன் அன்பின் தோளில், அடைக்கலம் தரமறுத்து
தள்ளிவிடுகிறாயடி தவிப்புக்குள் என்னை...
இமையின் கைகோர்த்து, கனவுகளில் உன்னை கடன்வாங்குகிறேன்....
இதயத்தின் கைவிரித்து,காதலியாக உன்னை கடன்வாங்கினேன்....
நினைவின் கைபிடித்து, நீண்டஆயுளை உன்னிடம் கடன்வாங்குவேன்....
No comments:
Post a Comment