13 November 2013

கண்ணீர்மழையில்

கருவறை கவிதை
மழலை...
கருமேக கவிதை
மழை...
கருவிழி கவிதை
கண்ணீர்...
**********
உனக்காக
பிறந்ததை உணரவில்லை
உனக்காக
இறக்கும்வரை...
*************
ஜீவனிருந்தால் இதயமுண்டு...
இதயமிருந்தால் காதலுண்டு...
காதலிருந்தால் கண்ணீருண்டு...
கண்ணீருந்தால் நினைவுண்டு...
நினைவிருந்தால்
நீயுண்டு...
நீயிருந்தால் நிலவின்அழகுக்கு எதிரியுண்டு...
*************
இரவுக்காக
பிறந்தவள்
வெண்ணிலவு ...
இதயத்துக்காக
பிறந்தவள்
பெண்ணிலவு...
************
உன் நிஜங்கள் தொலைந்துபோனால்,
நினைவுகள் அழைந்துதேடும்
உன் நிஜத்தை...
உன் அன்பு தொலைந்துபோனால், ஆயுளும்
அழைந்துதேடும் என் மரணத்தை....
***************
வான்மழையில்
வானவில்
கரைவதில்லை.. கண்ணீர்மழையில் காயங்கள்
கரைவதில்லை..
இந்த உண்மையை உணர்ந்த
எந்த இமைகளும்
கண்ணீர் சிந்தாது.....
******************
இன்பதேசம் சென்று மகிழ்ச்சிமாலை அணியும் மனதைவிட,
துன்பதேசம் சென்றபின்பு கண்ணீர்மாலை அணியாமல்
காயங்களை கடந்துவரும் இதயமே இனிய இதயம்...
*****************
நினைக்கும்
நிமிடங்களில் நிற்பதில்லை - நீ...
காத்திருக்கும்
காலங்களில் கடப்பதில்லை - உன் காதல்...
அழைக்கும் அரைநொடியில் அமருவதில்லை - உன் அன்பு...
******************
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment