13 November 2013

மேகத்தின் முதுகில் ஏறி

சாலையில்,
பாதையின் நீளமே
பயணத்தின் நீளம்...
வாழ்வில்,
புன்னகையின் நீளமே
கண்ணீரின் நீளம்...
************
திறமைகள் திறக்கப்படாதவரை அவரவருக்கான அடையாளங்களும் அடைக்கபட்டிருக்கும்...
*************
நேற்றுவரை நேசமாக இருந்த நீ
இன்றுமுதல் என்சுவாசமாக
மாறியதால், என்வாழ்வின்வாசமும் மாறி வசந்தத்தின் வாயிலில் நிற்கிறேன் உன்னைகாண...
****************
பல நொடிகள் சிந்திக்க வைக்கும் உன்நினைவைவிட
சில நொடிகளில் உன்னை சந்திக்க வைக்கும் கனவே
அழகானது....
*************
கொதிக்கும் உன்கோபங்களும் அழகே எனக்காக உன்முகத்தில்
குதிப்பதால்.....
*****************
தலைக்கணத்தை
தள்ளி வை
ஆசைகளை
அள்ளி வை
ஆர்வங்களை
கொட்டி வை
அனுபவங்களை
அடைத்து வை
காயங்களை
பேச வை
தன்னம்பிக்கையை
கட்டி வை
முயற்சிகளை
ஓட வை
இவைகளை செய்து
வெற்றிகளை
தேட வை
வாழ்வை
மகிழ வை......
*************** 
வான் எழுதும் கவிதை நிலா...
நான் எழுதும் கவிதை
நீ...
 **************
இரவுதேவதை இருவிழிபார்வையில் நீச்சலாட வரமால், நாணஉடை கோர்த்து
மேகத்தின்முதுகில்ஏறி வலம்வருகிறாள்
வானை....
***************
 
 
 
 
 
 

No comments:

Post a Comment