13 November 2013

பொழுதுகளும் பழுதடைந்தன

இதயத்தில்
நல்லெண்ணங்களை தெளித்து,
அன்பை வரவேற்த்து,
யோசனைகளுக்கு வாசனைதடவி, காயங்களை நிரப்பாமல்
இதயசுவரில்
புன்னகையை பூசி வாழ்க்கையை கவிதையாக்கி
ரசிப்போம்....
************
மரமாக ஜீவன்பெற்றால்,
சருகாகும் இலை-உறவுகள்
உதிரும் பூக்கள் - காதல்
உயிர்தரும் வேர் - நட்பு...
*************
வார்த்தைபூசிய
கவிதைகளுக்கு
வண்ணம்பூச தேவையில்லை...
வண்ணம்பூசிய
ஒவியத்திற்கு
வார்த்தைபூச
தேவையில்லை....
"தேவையை
அறிந்து செயல்படு"....
*************
மறைத்தாலும் வெளிவரும்
அன்பின் முகமும்
நிலவின் முகமும்
ஒன்று....
மறைந்தாலும் மாறாத
அன்பின் நிறமும்
நிலவின் நிறமும்
ஒன்று....
**************
பூங்காற்றின்
கைகள்பட்டு
உதடுகள் உலருவதை
போல
ஆண்காற்றின் பார்வைகள்பட்டு
உள்ளம் உளருகிறது....
***************
உன் பார்வை படாமல் போனால்,
பகல்
பிறக்காமல் போகிறது
இரவு
இறக்காமல் போகிறது.....
**************
வெள்ளை பனிஆடை சூடூம் காலையும்
மஞ்சள் கதிர்ஆடை சூடும் மாலையும்
கருப்பு ஆகாயஆடை சூடும் இரவும்
இவைகளை காணவந்த கண்கள் வண்ணஆடை சூடும்.....
***************
பெண்ணே! உன்னால் வானிலைபோல் வாழ்நிலையும் மாற்றமடைந்து, பொழுதுகளும் பழுதடைந்து
நிற்கின்றன....
**************
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment