13 November 2013

சிறகில்லா வான்பறவையே

இறைவன் கொடுத்த இதயம், இத்தனைநாட்களாக உயிர்சுமப்பதெற்காக உயிர்சுமக்கிறதென பொருள் புரிந்தேன்....
இன்றுதான்,
உன்னை சுமப்பதெற்காக உயிர்சுமக்கிறதென பொருள் அறிந்தேன்....
*************
கண்களுக்கு
வெள்ளையாய் தெரிபவரெல்லாம் அழகானவரல்ல...
இதயத்துக்கு வெள்ளையாய் தெரிபவர்களே அழகானவர்கள்...
**************
இரவு முழுவதும் வாழ்ந்த நிலவு
காலையில் இறக்கும்...
பகல் முழுவதும் வாழ்ந்த கதிரவன்
மாலையில் இறக்கும்...
இதயம் முழுவதும் வாழ்ந்த நீ
இதயம் இறந்தாலும் இருக்கிறாய்....
**************
நிலா:-
கதிரவனின்
கண்ணில் படாமலும்,
கையில் சிக்காமலும்
வாழும் ஒரே பெண்தேவதை நீயே
*************
இரவை காதலிக்க சிறகில்லா வான்பறவையே!
நீ(நிலா) காரணமாகிப்போனாயடி...
*************
முகம்மட்டும் காட்டும் இரவின் பெண்ணே!உன்னை விரல்நீட்டி தொடமுயற்சித்து தோல்வியில் விழுந்துவிட்டேன்.... உன்னை விழிவழி தொடமுயற்சித்து வெற்றியில் எழுந்துவிட்டேன்....
***************
 
 
 
 
 
 

No comments:

Post a Comment